இலங்கை செய்தி

கொழும்பு வரும் ரஷ்ய தூதுக்குழு ஜனாதிபதியுடன் இன்று பேச்சு!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கைக்கு இன்று (26) பயணம் மேற்கொள்ளவுள்ள ரஷ்ய தூதுக்குழுவினர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் அனடோலியேவிச் மார்ஷவின் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவே கொழும்பு வருகின்றது. நீண்டகால ஒத்துழைப்புக் கட்டமைப்பின் மூலம், பெட்ரோலிய விநியோகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட, இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையேயான உடன்பாடு செய்து கொள்வது குறித்து இக்குழு ஆராயவுள்ளது. 1974-ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கையுடன் ஒரு முறையான எரிசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து மூத்த […]

ஆஸ்திரேலியா செய்தி

ஐ.எஸ். கொடியை இறக்குமதி செய்த ஆஸ்திரேலிய சிறுவன் கைது!

  • March 26, 2026
  • 0 Comments

ஐ.எஸ். IS பயங்கரவாத அமைப்பின் கொடியை இறக்குமதி செய்தார் எனக் கூறப்படும் ஆஸ்திரேலியா Australia , மெல்போர்னைச் Melbourne சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட தடைசெய்யப்பட்ட மேற்படி கொடியைக் காவல்துறையினர் கைப்பற்றிய பின்னர், அது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து மேற்படி சிறுவனின் மின்னணு சாதனங்களை ஆய்வு செய்தபோது, பயங்கரவாதச் செயல்களுக்கு உதவும் வகையிலான தகவல்கள் அவரிடம் இருந்தது கண்டறியப்பட்டது. அதன்பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார். சிறார் நீதிமன்றத்தில் சிறுவன் முற்படுத்தப்பட்டுள்ளார். […]

இலங்கை

சுட்டெரிக்கும் வெயில்: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கையின் பல பாகங்களில் இன்று (26) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இந்த அதீத வெப்பம் உணரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும், தேவையற்ற கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மேலதிக […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர்: சிறப்பு தூதுவரை நியமித்தது ஐ.நா.!

  • March 26, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஓர் அங்கமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், பிரெஞ்சு தூதர் ஜீன் அர்னால்ட்டை French diplomat Jean Arnault தனது தனிப்பட்ட தூதராக நியமித்துள்ளார். 30 வருடங்களுக்கு மேலாக சர்வதேச அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அர்னால்ட், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரச் சீரழிவு குறித்து நேரடி ஆய்வுகளை மேற்கொள்வார். ஈரான் மீதான போர் உலகளாவிய எரிசக்தி மற்றும் உர விநியோகத்தைப் பாதித்துள்ளதால், இந்தப் பதற்றம் […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் நோக்கிச் சென்ற கப்பலை திருப்பி அனுப்பிய ஈரான்!

  • March 25, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் திருப்பி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் நோக்கி முறையான அனுமதி இன்றி பயணித்த ‘Selan’ என்ற கொள்கலன் கப்பல், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக நுழைய முயன்றபோது ஈரானிய கடற்படையினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து IRGC கடற்படைத் தளபதி அலிரேசா டாங்சிரி தனது […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை நிராகரித்தது ஈரான்?

  • March 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்சத் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் மிகவும் நியாயமற்றது மற்றும் ஒருதலைப்பட்சமானது என்று ஈரானிய உயர் மட்ட தூதரக அதிகாரி ஒருவர் விமர்சித்துள்ளார். ஊடகங்களில் கூறப்படுவதுபோல இந்த முன்மொழிவு பயனுள்ளதாக இல்லை என்றும், இது உலக நாடுகளை திசைதிருப்பும் முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானைப் பொறுத்தவரை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், மற்ற நாடுகளைப் போலத் தேவையில்லாமல் தனது இலக்குகளை மாற்றிக்கொள்ளாது என்றும் […]

உலகம் செய்தி

மங்களூருக்கு வரும் ஈரானிய எல்பிஜி – இந்தியா மீண்டும் ஈரானுடன் வியாபாரம்

  • March 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தற்காலிக தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் ஈரானிய எல்பிஜி பொருட்களை கொள்வனவு செய்துள்ளது ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்தது. 2019 இல், மேற்கத்திய தடைகள் காரணமாக இந்தியா ஈரானிடமிருந்து எரிசக்தி கொள்வனவு செய்வதை நிறுத்தியிருந்தது. இந்த எல்பிஜி பொருட்கள், ‘அரோரா’ என்ற கப்பலில் இந்தியாவின் மங்களூர் மேற்குக் கடற்கரைத் துறைமுகத்திற்கு வரவிருக்கிறது. எரிபொருள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் […]

ஐரோப்பா செய்தி

வடகடல் எரிவாயு திட்டங்கள், கட்டண ஆதரவு குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் வாதப் பிரதிவாதம்

  • March 25, 2026
  • 0 Comments

இந்த வார பிரதமர் கேள்வி நேரத்தில், பிரதமர் ஸ்டார்மர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி படேனொக் இடையே வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்ட உரிமைகள் குறித்து வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது. “ரோஸ்பேங்க் மற்றும் ஜாக்டா எரிவாயு வயல்களுக்கு அனுமதி அளிப்பீர்களா?” என படேனொக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்டார்மர் “இது எரிசக்தித் துறைச் செயலாளரின் விடயம். ஆனால் எரிசக்தி விலைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு, புதிய ஆதாரங்களை மேம்படுத்துவது அவசியம் என்றார். மேலும், நாடு […]

உலகம் செய்தி

ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: ஐ.நாவில் 27 ஆம் திகதி விவாதம்!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானிலுள்ள பாடசாலைமீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் UN Human Rights Council எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) விவாதம் நடைபெறவுள்ளது. மேற்படி தாக்குதலில் 168 சிறார்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய இந்தத் கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பில் விவாதிக்குமாறு ஈரான், சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையிலேயே இந்த அவசரக் கூட்டம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெறுகிறது. போர் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த தாய்லாந்து எண்ணெய் கப்பல்

  • March 25, 2026
  • 0 Comments

தாய்லாந்து எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து சென்றதாக பாங்சாக் கார்ப்பரேஷன் உறுதிப்படுத்தியுள்ளது. தாய்லாந்து மற்றும் ஈரான் இடையேயான சமீபத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்து. தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கியோ, கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய ஈரான் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். கப்பல்களின் பெயர்களை முன்கூட்டியே தெரிவித்து, பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!