கொழும்பு வரும் ரஷ்ய தூதுக்குழு ஜனாதிபதியுடன் இன்று பேச்சு!
இலங்கைக்கு இன்று (26) பயணம் மேற்கொள்ளவுள்ள ரஷ்ய தூதுக்குழுவினர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் அனடோலியேவிச் மார்ஷவின் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவே கொழும்பு வருகின்றது. நீண்டகால ஒத்துழைப்புக் கட்டமைப்பின் மூலம், பெட்ரோலிய விநியோகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட, இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையேயான உடன்பாடு செய்து கொள்வது குறித்து இக்குழு ஆராயவுள்ளது. 1974-ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கையுடன் ஒரு முறையான எரிசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து மூத்த […]













