செய்தி

உருகும் பனியால் வெளிவரும் 5000 ஆண்டு பழைமையான பாக்டீரியா : எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

  • February 17, 2026
  • 0 Comments

ருமேனியாவில் உள்ள ஒரு பழங்கால பனிக்கட்டி குகையில் இருந்து 5,000 ஆண்டுகள் பழமையான பாக்டீரியா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பழங்கால பாக்டீரியா திரிபு 10 வெவ்வேறு நவீன நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளது. குறிப்பாக கடுமையான தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கும் எதிர்ப்பை காட்டியுள்ளது. இந்நிலையில் உருகும் பனியால் இந்த பாக்டீரியாக்கள் வெளியேற்றப்பட்டால், அவற்றின் எதிர்ப்பு மரபணுக்கள் வேகமாக  பரவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டிபயாடிக் எதிர்ப்பின் உலகளாவிய சவாலை அதிகப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் அச்சம் […]

இலங்கை செய்தி

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த சாசனம்: முதல் தெற்காசிய நாடாக இணைகிறது இலங்கை!

  • February 17, 2026
  • 0 Comments

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை இன்று வெளிப்படுத்தியது. கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து இவ்வாறு விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரிட்டன் துணை பிரதமர் டேவிட் லம்மி கலந்துகொண்டார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜினால் இதற்கான உத்தியோகபூர்வ விருப்பக் கடிதம் கையளிக்கப்பட்டது. இலங்கை நீண்டகாலமாக […]

இலங்கை செய்தி

வவுனியா மாணவி படுகொலை சம்பவம் – 10 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் குடும்பம்

  • February 17, 2026
  • 0 Comments

வவுனியாவில் 16 வயது மாணவியான ஹரிஸ்ணவி படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லையென உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த போது அந்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். எனினும் ஒவ்வொரு வழக்குகளும் தவணை இடப்பட்டு கடந்து செல்வதாக தெரிவித்த உறவினர்கள் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு இதுவரை தண்டனை […]

அரசியல் இலங்கை செய்தி

” யாழ்.மக்களாலேயே ரணில் தோற்றார்” – ஐ.தே.க. கவலை

  • February 17, 2026
  • 0 Comments

“2005 ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு மக்கள் வாக்களிப்பை புறக்கணிக்காது இருந்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார்.” – என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே Ranil Wickremesinghe வெற்றி பெற்றிருப்பார். யாழ்ப்பாணத்தில் தேர்தலை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் அவர் இலகுவில் வென்றிருப்பார். அந்த தேர்தலில் தோற்ற பின்னரே ரணிலின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. ரணில் விக்கிரமசிங்க என்பவர் […]

இலங்கை செய்தி

கம்பளையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

  • February 17, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டு டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் அவரது குழுவினர் நேற்று பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தனர். இந்நிலையில் அவர்கள் இன்றைய தினம் கொழும்பு திரும்பியதும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளனர். இந்த சந்திப்புகளின் போது, ​ இலங்கையின் […]

இலங்கை செய்தி

பொருளாதார உறவை வலுப்படுத்த ஜப்பான், இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து!

  • February 17, 2026
  • 0 Comments

“இலங்கை – ஜப்பான் அரசுகளுக்கிடையிலான பொருளாதாரக் கொள்கை உரையாடல்” (Intergovernmental Economic Policy Dialogue) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளை ஒரு புதிய திசைக்கு இட்டுச் செல்லும் வகையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு முக்கிய மைல்கல்லாக, இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு இடையே பொருளாதாரக் கொள்கை உரையாடல் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Memorandum of […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் வேலையற்றோர் வீதம் – சிக்கலில் உள்ள துறைகள்!

  • February 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் வேலையின்மை வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புள்ளிவிபரங்களுக்கு அமைய டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொவிட் காலப்பகுதியோடு ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் வேலை தேட உதவும் வகையில் அரசாங்கம் ‘செயலில் உள்ள நடவடிக்கைகளை’ செயல்படுத்தி வருவதாக  அமைச்சர் ஒருவர் […]

உலகம்

இஸ்ரேலில் இரு பெண் IDF வீரர்களை துரத்திய ஆண்கள் – 28 பேர் கைது!

  • February 17, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் டெல் அவிவின் கிழக்கே உள்ள பினீ பிராக் (Bnei Brak) தெருக்களில்  இரண்டு பெண் ஐ.டி.எஃப் ( IDF) வீரர்களை தீவிர ஆர்த்தடாக்ஸ் ஆண்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் 28 பேரை இஸ்ரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில்  பெரும்பாலானவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இரண்டு சந்தேக நபர்களை  ஐந்து நாட்கள் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் கட்டாய இராணுவ சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  கலவரங்கள் […]

விளையாட்டு

ஆப்கானிஸ்தானின் கனவை பறித்த நியூசிலாந்தின் வெற்றி!

  • February 17, 2026
  • 0 Comments

நியூசிலாந்து New Zealand மற்றும் கனடா Canada ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. T20 உலகக்கிண்ண தொடரில் 31வது லீக் ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் போட்டியிட்டன. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. யுவராஜ் சம்ரா 65 பந்துகளில் 110 ஓட்டங்களை விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு கனடா அணி 173 […]

இலங்கை

அக்குரேகொட இரட்டை படுகொலை விவகாரம் : பணிப்புறக்கணிப்பில் சட்டதரணிகள்!

  • February 17, 2026
  • 0 Comments

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட மிலேச்சத்தனமான சம்பவத்தைக் கண்டித்து, கந்தளாய் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் நேற்று (16)  பாரிய கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மற்றும் கந்தளாய் நீதிமன்றத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், தமது கைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்து, கண்டனப் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த இரட்டைப் படுகொலையை வன்மையாகக் கண்டித்த அவர்கள், குற்றவாளிகளுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]

error: Content is protected !!