இலங்கை செய்தி

ஓய்வூதியம் ரத்து: சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

  • February 17, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் (17) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் பதிவாகின. இதனைத் தொடர்ந்து குழு நிலையில் நாடாளுமன்றஉறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோர் சட்டமூலத்தின் மூன்றாவது பிரிவுக்கு திருத்தங்களை முன்வைத்தனர். அவற்றை ஏற்றுக் […]

இலங்கை செய்தி

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – மேலும் ஒருவர் கைது

  • February 17, 2026
  • 0 Comments

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று (17) பிற்பகல் பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கொண்டு சென்றுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட […]

உலகம்

வெப்பநிலை உயர்வு – கிரீன்லாந்தில் அழிவடைந்து வரும் இன்யூட் மக்களின் கலாச்சாரம்!

  • February 17, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நாய் சவாாி தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது ஆர்டிக் பகுதிகளில் பனிகட்டிகள் உருகி வருவதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையானது  ஆயிரம் ஆண்டுகள் பழமையான இன்யூட் நடைமுறையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை நிரந்தர உறைபனி உருகுவதற்கும் உலகளாவிய கடல் மட்ட உயர்வுக்கும் கணிசமாக பங்களிக்கிறது. அத்துடன் முக்கியமான கனிம படிவுகளை வெளிப்படுத்தக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்க்டிக் […]

இலங்கை செய்தி

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து: சட்டமூலம் நிறைவேற்றம்!

  • February 17, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (17) நிறைவேற்றப்பட்டது. மேற்படி சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல எனவும், அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – கடும் வாகன நெரிசல்

  • February 17, 2026
  • 0 Comments

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (17) எதிர்ப்பு பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல்கலைக்கழகத்திற்கு அருகில் சில மணிநேரம் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தன்னிச்சையான முறையில் பல்கலைக்கழக மாணவர்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக, கொழும்பு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் ஹிமிசர தெனுவன் கூறியுள்ளார். பல்கலைக்கழகங்களுக்குள் மாணவர்கள் ஏதேனும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வதாயின், அதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஒழுங்குபடுத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் […]

ஐரோப்பா

ஆயுத கடத்தல் குற்றச்சாட்டு – அமெரிக்க பிரஜைக்கு சிறை தண்டனை விதித்த ரஷ்யா!

  • February 17, 2026
  • 0 Comments

மொஸ்கோ விமான நிலையத்தில் இருந்து துப்பாக்கிகளை கடத்த முயன்றதாக கூறப்படும் அமெரிக்க பிரஜை ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கலாஷ்னிகோவ் (Kalashnikov) ஆயுதங்களை சேகரிப்பவரான அந்த நபர், மொஸ்கோவின் வுனுகோவோ (Vnukovo) விமான நிலையத்தில் இருந்து குறித்த ஆயுதத்தை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அடையாளம் வெளியிடப்படாத அந்த நபர், ஆயுதக் கடத்தல் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து […]

இலங்கை செய்தி

இலங்கையின் மீட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் – IMF முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு

  • February 17, 2026
  • 0 Comments

அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் அவருக்கும் இடையே இன்று (17) சந்திப்பு இடம்பெற்தையடுத்து. கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தமது எக்ஸ் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரது பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “இலங்கை வெகுதூரம் கடந்து வந்துள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருகிறது. அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி இந்தியா பயணமானார்

  • February 17, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கமைய, 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பிற்பகல் இந்தியா பயணமானார். செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாடு புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் […]

உலகம் செய்தி

பிரதமராக பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்

  • February 17, 2026
  • 0 Comments

பங்களாதேஷின் தேசியவாத கட்சியை சேர்ந்த தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றுள்ளார். அத்துடன் அவருடைய புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்கின்றது. பங்களாதேஷில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாணவர் போராட்டத்தின் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து பங்களாதேஷில், பேராசிரியர் மொஹமட் யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இதன்பின்னர், பெப்ரவரி 12 இல் பொது தேர்தல் நடத்தப்படும் […]

இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து பிரிட்டன் துணை பிரதமர் மகிழ்ச்சி!

  • February 17, 2026
  • 0 Comments

  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மி (David Lammy) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் Anura Kumara Dissanayake பேச்சு நடத்தினார். ஜனாதிபதி அலுவகத்தில் இன்று (17) முற்பகல் மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் தற்போதைய நிலையில் விஜயம் மேற்கொண்டமைக்காகப் பிரிட்டன் துணைப் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போது பிரிட்டன் வழங்கிய ஒத்துழைப்புகளைப் பாராட்டினார். குறிப்பாக, இலங்கையின் ஆடை […]

error: Content is protected !!