பேரிடர் நிவாரணத்துடன் கல்வி அமைச்சின் 2026 புத்தாண்டு ஆரம்பம்
2026ஆம் ஆண்டின் புத்தாண்டை கல்வி அமைச்சு, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் மனிதாபிமான நடவடிக்கையுடன் ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமைச்சின் ஊழியர்கள் தங்களது சம்பளத்தின் ஒரு பகுதியை பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினர். புத்தாண்டு தொடக்கத்தை குறிக்கும் வகையில், கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று (01) விசேட நிகழ்வொன்று நடைபெற்றது. இதன்போது, பேரிடரால் உயிரிழந்தவர்கள் மற்றும் மீட்பு பணிகளில் உயிர் தியாகம் செய்த முப்படை வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. […]













