சீனாவுக்கு முன் இத்தாலியில் பரவிய கோவிட்-19 வைரஸ் – தடயங்கள் கண்டுபிடிப்பு
சீனாவுக்கு முன்னதாகவே இத்தாலியில் கோவிட் வைரஸ் பரவியதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2020ஆம் ஆண்டில் கோவிட் வைரஸ் உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், பல லட்சம் பேர் உயிரிழந்தனர். இதுவரை, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸ் காரணமாகவே இந்தத் தாக்கம் ஏற்பட்டதாகக் கருதப்பட்டு வந்தது. எனினும், 2019ஆம் ஆண்டிலேயே இத்தாலியில் கோவிட் வைரஸ் பரவியமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் தேசிய சுகாதார நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வில், வடக்கு பகுதியிலுள்ள […]













