இலங்கை

டிப்பர் லொறியுடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – மூவரின் நிலை கவலைக்கிடம்!

  • November 12, 2025
  • 0 Comments

அம்பலாந்தோட்டை கிவுல பகுதியில் இன்று  பேருந்தும் டிப்பர் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்பர் லொறியின் ஓட்டுநரும் படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாத்தறையிலிருந்து மஹகல்வெவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், ஹம்பாந்தோட்டையிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிப்பர் லொறியும் விபத்தில் சிக்கியுள்ளன. விபத்து நடந்த பகுதி மிகவும் வளைவுகள் கொண்ட சாலை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]

உலகம் செய்தி

அணுசக்தி கொள்கையை மாற்றுமா ஜப்பான் – புதிய பிரதமரிடம் இருந்து வந்த சாதகமான தகவல்!

  • November 12, 2025
  • 0 Comments

ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi) நாட்டின் பழைமையான அணுசக்தி அல்லாத கொள்கைகளில் சாத்தியமான மாற்றத்தை கொண்டுவர முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய மாற்றங்கள்  அத்தகைய ஆயுதங்கள் நாட்டிற்கு கொண்டுவருவதற்கான தடைகளை திருத்த முயற்சிக்கலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்களை வைத்திருக்கவோ, உற்பத்தி செய்யவோ அல்லது அதன் எல்லைக்குள் அறிமுகப்படுத்தவோ கூடாது என்ற மூன்று கொள்கைகள்  ஜப்பானில் காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. அந்த மூன்று கொள்கைகளும்  ஜப்பானின் பாதுகாப்பு உத்தியின் வரவிருக்கும் திருத்தத்தில் பராமரிக்கப்படுமா […]

விளையாட்டு

பாகிஸ்தான் தற்கொலைக்குண்டு தாக்குதல் – நாடு திரும்பும் இலங்கை அணி!

  • November 12, 2025
  • 0 Comments

இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து  பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் 16 இலங்கை வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஒரு தற்கொலை குண்டுதாரி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.  அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஓட்டுநர் தேர்வில் களமிறக்கப்படும் இராணுவம்!

  • November 12, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் ஓட்டுநர் தேர்வு நிலுவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக புதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இதற்கமைய பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த 36 இராணுவ ஓட்டுநர் தேர்வாளர்கள் இந்த விடயத்தில் உதவி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுநர் தேர்வுகளை விரைந்து நடத்தி முடிக்க முடியும் எனவும்   அதிக தேவை உள்ள இடங்களில் அடுத்த ஆண்டு மேலும் 6,500 சோதனைகள் கிடைக்கும் என்று போக்குவரத்துத் துறை (DfT) தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறையின் சிவிலியன் பணியாளர்களைக் கொண்ட […]

ஐரோப்பா

ஜார்ஜியா விமான விபத்து – கருப்புப் பெட்டி மீட்பு!

  • November 12, 2025
  • 0 Comments

ஜார்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கிய இராணுவ விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். புதிய தகவல்களின் படி 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் யார் என்பது இனங்காணப்படவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானமானது, ஜார்ஜியாவின் எல்லையைக் கடந்த சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புலனாய்வாளர்கள் விமானத்தின் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் என்ன என்பதை […]

இந்தியா செய்தி

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  • November 12, 2025
  • 0 Comments

மும்பையிலிருந்து வாரணாசிக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக  செய்தி வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த விமானம் இன்று வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில்  தரையிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த 176 பயணிகள்  மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் விமானம் முழு பாதுகாப்பு ஆய்வுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கட்டாய சோதனைகள் முடிந்ததும் விமானம் சேவைக்குத் திரும்பும் என்று அதிகாரிகள் […]

பொழுதுபோக்கு

“ஜெய்லர் 2” மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பும் நடிகை

  • November 12, 2025
  • 0 Comments

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். ஜெய்லர் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், ரித்விக், யோகி பாபு, VTV கணேஷ் ஆகியோர் ஜெய்லர் 2 இலும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த, மோகன் லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களை தவிர ‘ஜெயிலர் 2’ படத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இணைந்துள்ளதாக […]

உலகம் செய்தி

இந்தோனேசியாவில் அரசின் இலவச உணவு திட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

  • November 12, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட  அரசாங்கத்தினால் இலவச உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டமே உணவு விஷமானதற்கு பிரதான காரணம் என சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என விமர்சகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தத் திட்டத்தை மேற்பார்வையிடும் தேசிய BGN நிறுவனத்தின் தலைவரான தாதன் ஹிந்தயானா (Dadan Hindayana) இந்தோனேசியா […]

இலங்கை

அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளிகள் – 15 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்!

  • November 12, 2025
  • 0 Comments

இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளின் கீழ் தேடப்படும் 82 இலங்கையர்களில் 15 பேர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) வசித்து வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த நபர்கள் இருப்பதை இன்டர்போலுக்கு அறிவித்துள்ளதாகவும், அவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் மூத்த காவல்துறை அதிகாரியை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில், திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கராவும் ஒருவர், அக்டோபரில் துபாய் காவல்துறையினரால் […]

அரசியல் இலங்கை

வடக்கில் இருந்து ராணுவம் எப்போது வெளியேறும்?

  • November 12, 2025
  • 0 Comments

“ வடக்கு, கிழக்கில் போதைப்பொருளுக்கு இராணுவம்தான் பிரதான காரணம். எனவே, அங்கிருந்து இராணுவம் எப்போது வெளியேற்றப்படும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமைச்சர் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திர சேகர், வடக்கு, கிழக்கின் கல்வி நிலை மற்றும் போதைப்பொருள் மாபியா பற்றி கருத்துகளை வெளியிட்டார். இதன்போது எழுந்த கஜேந்திரகுமார் எம்.பி., “ […]