இலங்கை

இலங்கையில் சகல துறைகளையும் டிஜிட்டல் மயமாக்க தயாராகும் அரசாங்கம்!

  • November 13, 2025
  • 0 Comments

இலங்கையில் சகல துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தி இருப்பதாகப் பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வேலை தேடுபவர்களுக்குப் பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆட்களை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி கொழும்பில் உள்ள மண்டபக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவும் உரையாற்றினார். இலங்கை மக்கள் உலகத்துடன் […]

கருத்து & பகுப்பாய்வு

ஆஸ்திரேலியாவில் மரம் ஏறும் முதலைகளின் முட்டை ஓடுகள் மீட்பு – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

  • November 13, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகப் பழமையான முதலைகளுக்குச் சொந்தமான முட்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மரம் ஏறும் வகையைச் சேர்ந்த முதலை இனங்களுக்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஒரு பண்ணை விவசாயியின் கொல்லைப் புறத்திலிருந்து இந்த முட்டை ஓடுகள் மீட்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட முட்டை ஓடுகள் 55 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்கள் “Journal of Vertebrate Paleontology” என்ற சஞ்சிகையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பு ஆஸ்திரேலியாவில் உள்ள […]

ஐரோப்பா

உக்ரைனில் போருக்கு மத்தியில் பெரும் ஊழல்! ஜெலென்ஸ்கியின் நெருங்கிய வட்டாரத்திற்கு தொடர்பு

  • November 13, 2025
  • 0 Comments

உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவி வரும் இந்தச் சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டில் ஒரு பெரும் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த ஊழலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர், எரிசக்தித் துறையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைனிய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இது தொடர்பான விபரங்களை கண்டறிந்துள்ளனர். ரஷ்யாவின் தீவிர […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அகதிகள் பகிர்வுத் திட்டம் – 30,000 பேரை பகிர நடவடிக்கை

  • November 13, 2025
  • 0 Comments

இத்தாலி, கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகளின் தொடர்ச்சியான வருகையால் பெரிதும் திணறி வருகின்றன. இந்த நாடுகளின் சுமையைக் குறைக்கும் நோக்குடன், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி, ஆரம்பக் கட்டமாக, குறைந்தது 30,000 தஞ்சம் கோருவோரை மற்ற ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள உள்ளன. இது, முன்னணி நாடுகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாகும். இந்த நிலையில், ஐரோப்பாவிற்கெனத் […]

விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் தொடர்! திட்டமிட்டபடி நடத்த இலங்கை கிரிக்கெட் அமைப்பு வலியுறுத்தல்

  • November 13, 2025
  • 0 Comments

இலங்கை – பாகிஸ்தான் சுற்றுத்தொடரை திட்டமிட்டவாறு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அமைப்பு அணியின் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை குழாமைச் சேர்ந்த வீரர்கள் பலர் தாம் நாடு திரும்ப விரும்புவதாகக் கூறியிருக்கிறார்கள். இஸ்லாமாபாத் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அணியின் வீரர்கள் பலர் நாடு திரும்ப விரும்புகிறார்கள் என அணியின் அதிகாரிகள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் முறையிட்டிருந்தார்கள். இதுபற்றி பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு […]

இலங்கை

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் ஜனாதிபதி விடுத்த உத்தரவு

  • November 13, 2025
  • 0 Comments

தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் தற்போதுள்ள தேக்கத்தை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆட்பதிவு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். டிஜிட்டல் அடையாள அட்டை வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அவர் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சின் முன்னேற்ற பரிசீலனை கூட்டத்தில் உரையாற்றினார். அமைச்சின் வளாகத்தில் கூட்டம் இடம்பெற்றது. அதன் நிர்வாக மற்றும் செயற்பாட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார். புதிய டிஜிட்டல் பொருளாதார அதிகார சபையை ஸ்தாபித்தல், டிஜிட்டல் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வேலை இழப்பு அபாயம்: மூன்றில் ஒரு நிறுவனம் ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்

  • November 13, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் உள்ள மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள், 2026ஆம் ஆண்டில் வேலைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் பொருளாதார நிறுவனத்தின் (German Economic Institute) புதிய அறிக்கை குறிப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட 2,000 நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில், 38 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைக்க விரும்புவதாகத் தெரியவந்துள்ளது. அதே சமயம், 18 சதவீத நிறுவனங்கள் மட்டுமே அடுத்த ஆண்டு அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிட்டுள்ளன. 2026ஆம் ஆண்டில் பல வணிகங்கள், குறைவாகச் செலவு செய்து உற்பத்தி நடவடிக்கைகளில் […]

உலகம் செய்தி

முக்கிய கூட்டத்தில் உறங்கிய ட்ரம்ப் – பைடனுக்கு பட்டப்பெயர் வைத்தவருக்கு நேர்ந்த கதி

  • November 13, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது உறங்கிய நிலையில் காணப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டங்களில் எடை குறைப்பு மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சியின்போதே ட்ரம்ப் இவ்வாறு லேசாக உறங்கிய சம்பவம் கமராவில் பதிவாகியுள்ளது. இதை “லேசாக அசந்த நேரம்” என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி ட்ரம்பிற்கு “The Nodfather” (தூக்க தந்தை) என கலிபோர்னியா ஆளுநர் கவின் […]

உலகம் செய்தி

சிறையில் அடைக்கப்பட்ட பிரெஞ்சு-அல்ஜீரிய எழுத்தாளரை விடுவிக்க அனுமதி

  • November 12, 2025
  • 0 Comments

தேசிய ஒற்றுமையை சீர்குலைத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட பிரெஞ்சு-அல்ஜீரிய(French-Algerian) எழுத்தாளர் பவுலெம் சான்சலுக்கு(Boualem Sansal) மன்னிப்பு வழங்குவதாக அல்ஜீரியாவின் ஜனாதிபதி அறிவித்துள்ளார். 81 வயதான நாவலாசிரியரின் வயது மற்றும் மோசமான உடல்நலம் காரணமாக அவரை விடுவிக்குமாறு ஜெர்மன்(Germany) ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர்(Frank-Walter Steinmeier) வலியுறுத்தியதற்கு பின்னர் இந்த விடுவிப்பு வந்துள்ளது. இந்நிலையில், மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, பவுலெம் சான்சால் மருத்துவ சிகிச்சைக்காக பெர்லினுக்கு(Berlin) அழைத்து செல்லப்பட்டுள்ளார் பிராங்கோஃபோன்(francophone) வட ஆபிரிக்க இலக்கியத்தில் பரிசு பெற்ற பவுலெம் சன்சால் அல்ஜீரிய […]

இந்தியா செய்தி

டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக அறிவிப்பு

  • November 12, 2025
  • 0 Comments

இந்த வாரம் டெல்லியில் பலரைக் கொன்ற கார் குண்டுவெடிப்பை பயங்கரவாதத் தாக்குதல் என்று இந்தியா தெரிவித்துள்ளது. “தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவத்தை நாடு கண்டுள்ளது,” என்று பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) அமைச்சரவை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், குற்றவாளிகள் அவர்களின் ஒத்துழைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டு விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்காக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது. இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க இடமான செங்கோட்டை பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த […]