இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் அரசியல் வாக்குவாதத்தில் ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் கொலை

  • November 17, 2025
  • 0 Comments

பீகார்(Bihar) தேர்தல் தீர்ப்பு தொடர்பாக அரசியல் விவாதங்கள் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) குணா(Guna) மாவட்டத்தில், 22 வயது இளைஞர் ஒருவர் தனது உறவினர்களால் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பீகாரின் ஷிவ்ஹார்(Shivhar) மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் சங்கர் மஞ்சி என்ற தொழிலாளி, தனது தாய் மாமாக்கள் 25 வயது ராஜேஷ் மஞ்சி மற்றும் 27 வயது தூபானி மஞ்சி ஆகியோருடன் தங்கியிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். […]

செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலிய பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நபர் 28 வயதில் மரணம்

  • November 17, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவிற்காக பாராலிம்பிக்(Paralympic) தங்கப் பதக்கம் வென்ற பைஜ்(Paige Greco) கிரேக்கோ 28 வயதில் காலமானார். டோக்கியோ(Tokyo) 2020 பாராலிம்பிக் போட்டிகளில் தனது நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற பாரா-சைக்கிள் ஓட்டுநர் அடிலெய்டில்(Adelaide) உள்ள தனது வீட்டில் உடல்நலம் குறைவால் காலமானார் என்று விளையாட்டின் தேசிய நிர்வாக அமைப்பான ஆஸ் சைக்ளிங் தெரிவித்துள்ளது. பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட பைஜ் கிரேக்கோ, 2018ல் சைக்கிள் ஓட்டுதலுக்கு மாறுவதற்கு முன்பு ஒரு தடகள வீரராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். கிரேக்கோ […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்களில் ஐந்து பேர் உயிரிழப்பு

  • November 17, 2025
  • 0 Comments

உக்ரைன்(Ukraine) மீது ரஷ்யா(Russia) நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிழக்கு உக்ரைனில் ஒரு மழலையர் பள்ளியை தாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு கார்கிவ்(Kharkiv) பிராந்தியத்தில் உள்ள முன்னணி நகரமான பாலக்லியாவின்(Balakliya) குடியிருப்புப் பகுதியில் நடந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்(Dnipropetrovsk) பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “பல அடுக்குமாடி கட்டிடங்களையும் ஒரு மழலையர் பள்ளியையும் தாக்கி […]

இந்தியா செய்தி

கர்நாடக உயிரியல் பூங்காவில் பாக்டீரியா தொற்று காரணமாக 31 மான்கள் மரணம்

  • November 17, 2025
  • 0 Comments

கர்நாடக(Karnataka) உயிரியல் பூங்காவில் பாக்டீரியா தொற்று காரணமாக 31 மான்கள் உயிரிழந்துள்ளதாக கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே தெரிவித்துள்ளார். மிருகக்காட்சிசாலையின் அறிக்கைபடி, நான்கே நாட்களில் 31 மான்கள் உயிரிழந்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே(Eshwar Khandre), இறப்புகள் குறித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தி, விலங்குகளிடையே நோயின் மூலத்தையும் பரவலையும் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நோய் மற்ற மிருகக்காட்சிசாலைகளுக்கு பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் செய்தி

ஈக்வடாரில்(Ecuador) பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 21 பேர் மரணம்

  • November 17, 2025
  • 0 Comments

ஈக்வடாரில்(Ecuador) ஒரு பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய நகரங்களான குவாரானா(Guaraná) மற்றும் அம்படோ(Ambato) இடையே பேருந்து சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது ஈக்வடாரில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் போக்குவரத்து விபத்துக்கள் அடங்கும். ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒருவர் கொல்லப்படுகிறார். 2025ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும், 4,756 போக்குவரத்து விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் அதில் 565 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு 2,300 […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி…!

  • November 17, 2025
  • 0 Comments

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி தனது இணையத் தொடரின் புரமோஷனுக்காக பங்கேற்றுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7வது வாரத்தை எட்டியுள்ளது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ள நடுசென்டர் என்ற இணையத் தொடரின் புரமோஷனுக்காக குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். நரு நாராயணன் இயக்கியுள்ள இந்த இணையத் தொடருக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இதனிடையே நடுசென்டர் புரமோஷனுக்காக […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பின் திவாகர் வெளியிட்ட அதிரடி தகவல்

  • November 17, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் கடந்த வார டபுள் எவிக்‌ஷனில் பிரவீனும், துஷாரும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். இவர்களை தொடர்ந்து, இந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளார். பெண்களைப் பற்றிய முறைகேடு பேச்சுகள், சாதி சார்ந்த விமர்சனம் போன்ற காரணங்களே இவர் வெளியேற காரணம் கூறப்படுகிறது. நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், எவிக்‌ஷனுக்குப் பிறகு தன்னுடைய முதல் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த […]

பொழுதுபோக்கு

தலைவர் 173 திரைப்படத்தை இயக்கப் போவது இவரா? மாஸ் கூட்டணி

  • November 17, 2025
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவர் 173’ படம் எந்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதோ தெரியவில்லை ஆரம்பமே கோணலாகி விட்டது. இயக்குனராக இருந்த சுந்தர் சி இப்படத்திலிருந்து திடீரென விலகிவிட்டார். இதனால் அப்படத்திற்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுந்தர் சி-யை அடுத்து இந்த பிரம்மாண்ட படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாகவும், கடும் போட்டியாகவும் இருந்தது. இந்த நிலையில் அதுபற்றிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, ‘தலைவர் 173’ படத்தை […]

இலங்கை

மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு – பெண் ஒருவர் பலி!

  • November 17, 2025
  • 0 Comments

மீட்டியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுமார் 4 மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட மகாதுர நளினின் சகோதரி மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மீட்டியாகொட காவல்துறையினர் […]

உலகம்

தட்டம்மை தடுப்பூசி பிரசாரம் – பாகிஸ்தானில் பயன்பெறும் மில்லியன் கணக்கான குழந்தைகள்!

  • November 17, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் தட்டம்மை, ரூபெல்லா மற்றும் போலியோ நோய்களைத் தடுக்கும் நோக்கில் தடுப்பூசி பிரசாரம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 57 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை இலக்காகக் கொண்டு குறித்த பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தேசிய அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 29 வரை நடைபெறும் இந்த இயக்கத்தின் மூலம், 34.5 மில்லியன் குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகள் வழங்கப்படும். அதேபோல் 23.3 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குழுக்களை ஆதரிக்க […]