செய்தி பொழுதுபோக்கு

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை(Warner Bros. Discovery) $83 பில்லியனுக்கு வாங்கும் நெட்ஃபிக்ஸ்(Netflix)

  • December 5, 2025
  • 0 Comments

பிரபல ஒளிபரப்பு நிறுவனமான நெட்ஃபிக்ஸ்(Netflix), திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி(Warner Bros. Discovery) நிறுவனத்தை கிட்டத்தட்ட $83 பில்லியனுக்கு வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு திரைப்பட பட்டியல் மற்றும் மதிப்புமிக்க ஸ்ட்ரீமிங் சேவையான HBO Maxஐ அணுக அனுமதிக்கிறது. 2019ம் ஆண்டில் டிஸ்னி ஃபாக்ஸை(Disney Fox) $71 பில்லியனுக்கு கையகப்படுத்தியதிலிருந்து பொழுதுபோக்கு துறையில் நடந்த மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும். “இன்றைய அறிவிப்பு உலகின் இரண்டு சிறந்த ஒளிபரப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்கிறது” […]

இலங்கை செய்தி

மொட்டு கட்சி அரசுக்கு ஆதரவா? – நாடாளுமன்ற உறுப்பினர் சானக விளக்கம்

  • December 5, 2025
  • 0 Comments

2026ம் நிதி ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு நாம் எதிராக வாக்களிக்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி(Sri Lanka Podujana Peramuna) அறிவித்துள்ளது. எனினும், இதன்மூலம் தமது கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கின்றது என அர்த்தப்படாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி. சானக(DV.Chanaka) தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சானக எம்.பி, “அனர்த்தத்துக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டமே இது. இதனை நிறைவேற்றி எவ்வித பயனும் இல்லை. எனவே, புதிய வரவு- […]

உலகம் செய்தி

ரஷ்ய குடிமக்களுக்கு விரைவில் இலவச 30 நாள் விசா திட்டம் – பிரதமர் மோடி

  • December 5, 2025
  • 0 Comments

இந்தியாவிற்கும்(India) ரஷ்யாவிற்கும்(Russia) இடையிலான கலாச்சார உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi), புது தில்லி(New Delhi) விரைவில் ரஷ்ய குடிமக்களுக்கு இலவச விசா திட்டம் அறிமுகப்படுத்தபடும் என்று தெரிவித்துள்ளார். புது தில்லியில் உள்ள ஹைதராபாத்(Hyderabad) மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்(Vladimir Putin) ஒரு கூட்டு செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஷ்ய குடிமக்களுக்கு 30 நாள் இலவச இ-சுற்றுலா விசா(e-tourist visa) மற்றும் 30 நாள் குழு சுற்றுலா […]

இலங்கை செய்தி

வதந்திகளை பரப்பாதீர்: எதிரணிகளுக்கு எச்சரிக்கை!

  • December 5, 2025
  • 0 Comments

நெருக்கடியான சூழ்நிலையில் போலி தகவல்களைப் பரப்பும் சந்தர்ப்பவாத அரசியலை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், “போலி தகவல்களை பரப்பாமல் இருப்பதுதான் தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் செய்யும் சிறந்த சேவையாக இருக்கும். அதேபோல சந்தர்ப்பவாத அரசியலை கைவிட்டுவிட்டு நாட்டை மீட்க ஒன்றுபட வேண்டும். அத்துடன், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய அனைத்து […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – இரண்டாம் நாள் முடிவில் 44 ஓட்டங்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா

  • December 5, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில்(Brisbane) உள்ள கப்பா(Gabba) மைதானத்தில் ஆரம்பமானது. அந்தவகையில், பகல் இரவு(Day&Night) போட்டியாக ஆரம்பான போட்டியின் நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. இந்நிலையில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் […]

இலங்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பும் அபாயம்

  • December 5, 2025
  • 0 Comments

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 97.87% ஆக உயர்ந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் மழை தொடர்ந்து பெய்தால், நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் படி நாட்டில் நிலவும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் காற்றின் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

X தளத்தை உலுக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ₹12.5 பில்லியனுக்கு மேல் அபராதம்!

  • December 5, 2025
  • 0 Comments

தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, எலான் மஸ்கிற்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான ‘X’ (முன்னர் ட்விட்டர்) மீது ஐரோப்பிய ஒன்றியம் மோசடி குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சமூக ஊடகத் தளமான ‘X’ இல் உள்ள அதன் நீல டிக் (Blue Checkmark) அமைப்பு தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் (EU) €120 மில்லியன் (சுமார் 1080 கோடி இந்திய ரூபாய்) அபராதம் விதிக்க முடிவெடுத்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் (European Commission) […]

இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

  • December 5, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு 157 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் கிடைத்தது. அந்த ஒரு வாக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியால் போடப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்புக் கோரமால் இருப்பதற்கும், எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதற்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்த நிலையில், […]

இந்தியா ஐரோப்பா

இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கட்டும் ரஷ்யா!

  • December 5, 2025
  • 0 Comments

இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை  கட்டவுள்ளதாக புடின் அறிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருடாந்திர  உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அங்கு பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் குறித்த விவாதங்களை முன்னெடுத்துள்ளார். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண அமெரிக்கா மற்றும் பிற கூட்டாளிகளுடன் ரஷ்யா ஒத்துழைத்து வருவதாக புடின் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு அமைதிக்கானது என்றும், உக்ரைனில் அமைதியான தீர்வுக்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களை கைவிடோம்: ஜனாதிபதி உறுதி

  • December 5, 2025
  • 0 Comments

“ சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மண்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு காணி வாங்குவதற்கும், வீடு அமைப்பதற்கும் நிதி வழங்கப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, தம்முடன் தற்போது வாழவேண்டியவர்களை நாம் இழந்து தவிக்கின்றோம். சில பகுதிகளில் கிராமங்களே மூழ்கியுள்ளன. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலர் உயிரிழந்திருந்தாலும் […]

error: Content is protected !!