ஐரோப்பா

ஜெர்மனியில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • September 16, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு இன்று (16.09) நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மே 31, 2024 அன்று நடந்த கத்திகுத்து தாக்குதலில் 29 வயதுடைய ரூவன் லார் என்ற பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார். ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி சுலைமான் என அடையாளம் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தாக்குதல் நடந்தபோது 25 வயதாக இருந்த ஆப்கானிஸ்தான் குடிமகன் […]

பொழுதுபோக்கு

மூன்று தலைமுறைகளுடனும் நடித்த ரம்யா கிருஷ்ணன்

  • September 16, 2025
  • 0 Comments

அக்கினேனி நாகேஸ்வரராவ் முதல் அக்கினேனி அகில் வரை, தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த ஒரு கதாநாயகி தான் ரம்யா கிருஷ்ணன் இவர் தமிழில் 1983ல் வெளிவந்த வெள்ளை மனசு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றவருக்கு படையப்பா படம் தனி அடையாளத்தை உருவாக்கியது. அக்கினேனி நாகேஸ்வர ராவுடன் இட்டாரு இட்டாரே, சூத்திரதாருலு போன்ற படங்களில் பணியாற்றினார். நாகார்ஜுனாவுடன் சங்கீர்தனா, […]

வட அமெரிக்கா

TikTok தொடர்பான கட்டமைப்பு ஒப்பந்தத்தை எட்டியுள்ள அமெரிக்கா, சீனா; வெள்ளிக்கிழமை பேச உள்ள டிரம்ப் மற்றும் ஜி

  • September 16, 2025
  • 0 Comments

அமெரிக்காவும் சீனாவும் இழுபறியாக இருந்த டிக்டாக் செயலி விவகாரம் தொடர்பில் இணக்கம் கண்டுள்ளன. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள உரிமையாளரிடம் டிக்டாக் செயலியை ஒப்படைக்க கட்டமைப்பு அளவிலான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் சீனாவும் செய்துகொள்ளவிருக்கின்றன. அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இம்மாதம் 19ஆம் திகதி தொலைபேசியில் உரையாடும்போது ஒப்பந்தம் உறுதிபடுத்தப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பிரபல டிக்டாக் செயலியை இம்மாதம் 17ஆம் திகதிக்குள் சீனா, அமெரிக்க நிறுவனத்திடம் கைமாற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவில் அது […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

UKவில் இருந்து பிரான்ஸுக்கு நாடுகடத்தப்பட இருந்த குடியேறி – மறுப்பு தெரிவித்த நிறுவனம்!

  • September 16, 2025
  • 0 Comments

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் திட்டம் கடைசி நிமிடத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் கால்வாயைக் கடந்து வந்த ஒரு புலம்பெயர்ந்தவர் நேற்று (15.09) பிற்பகல் பாரிஸுக்கு திட்டமிடப்பட்ட விமானத்தில் திருப்பி அனுப்பப்படவிருந்தார். ஆனால் ஜூலை மாதம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்துடன் உடன்பட்ட புதிய ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ ஒப்பந்தத்தின் கீழ் வெளியேற்றம் கைவிடப்பட்டது. ஏர் பிரான்ஸ் சேவையில் வெளியேற்றம் நடைபெறவிருந்ததற்கு சற்று முன்பு புலம்பெயர்ந்தவரின் வழக்கறிஞர்கள் தாமதமாக […]

மத்திய கிழக்கு

தோஹாவில் தாக்குதலுக்குப் பின்பு இஸ்ரேல் உறவுகளை மறுபரிசீலனை செய்ய அரபு,முஸ்லிம் தலைவர்கள் வலியுறுத்தல்

  • September 16, 2025
  • 0 Comments

கத்தார் தலைநகரில் ஹமாஸ் தலைவர்கள்மீது கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தோஹாவில் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற அவசர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இஸ்ரேலுடனான உறவை மறுபரிசீலனை செய்ய அரபுநாட்டு, முஸ்லிம் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். காஸா போர்நிறுத்த முன்மொழிவு குறித்து கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் கலந்தாலோசித்தபோது அவர்கள்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஏறக்குறைய 60 நாடுகளை ஒன்றிணைத்த அரபு லீக், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டு அமர்வு உறுதியான நடவடிக்கை எடுக்க முற்பட்டது. […]

செய்தி மத்திய கிழக்கு

காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இடம்பெறும் இனப்படுகொலை – ஐ.நா சுட்டிக்காட்டு!

  • September 16, 2025
  • 0 Comments

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து இந்த இனப்படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐ.நா சபை வெளியிட்டள்ள அறிக்கையில், ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்க வேண்டுமென்றே நிபந்தனைகளை விதிப்பது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது என்பனவற்றின் ஊடாக வௌிப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றாக இஸ்ரேலிய தலைவர்களின் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கங்கள் – அச்சத்தில் மக்கள்!

  • September 16, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு சற்று முன்பு ஒரானா பகுதியில் 3.8 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இவ் நிலநடுக்கமானது  10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும்,  விக்டோரியா வரை   உணரப்ட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஒருசில மணிநேரங்களில் இன்று (13.09) அதிகாலை மேல் ஹண்டரில் உள்ள மஸ்வெல்புரூக் அருகே 3.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவானது. ஆழமான ஓரானா […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இவ்வார இறுதியில் இருந்து வானிலையில் ஏற்படும் மாற்றம்!

  • September 16, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் பனிப்பொழிவு ஏற்படும் என MET அலுவலகம் அறிவித்துள்ளது. நீண்ட காலமாக நிலவிய வெப்ப மற்றும் வறண்ட வானிலைக்கு பிறகு ஒரு குளிரான வானிலை பிரித்தானியர்கள் தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த பதினைந்து நாட்களுக்கு இந்தப் போக்கு தொடரும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் வருவதால், பல பகுதிகளுக்கு காற்று குறித்த மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து & பகுப்பாய்வு

2030 ஆம் ஆண்டளவில் மனிதர்கள் சந்திரனில் வாழ முடியும் – விஞ்ஞானிகள் நம்பிக்கை!

  • September 16, 2025
  • 0 Comments

தற்போது விஞ்ஞானிகள் சந்திரனின் மறு பக்கத்தை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் 2030 ஆம் ஆண்டளவில் மனிதர்கள் சந்திரனில் வாழ முடியும் என்ற கூற்றை தற்போது முன்வைத்திருக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் விண்வெளி நிறுவனங்களும் நிரந்தர சந்திர தளங்களுக்கான திட்டங்களை மீண்டும் புதுப்பித்துள்ளன. நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டம் இந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் விண்வெளி வீரர்களை சந்திரனுக்குத் திருப்பி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் சீனா இரண்டும் […]

பொழுதுபோக்கு

திருமணம் குறித்து ஜான்வி கபூர் மனதில் இப்படி ஒரு ஐடியா இருக்கா?

  • September 16, 2025
  • 0 Comments

இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார். இப்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர். தற்போது, இவர் நடிப்பில் சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி படம் வெளிவர உள்ளது. இந்த படம் திருமணம் தொடர்பான படம் என்பதால் அவரிடம் […]