பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் பிரித்தானியா!
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (21) பாலஸ்தீனத்தை ஒரு சட்டபூர்வமான நாடாக அங்கீகரிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்த G7 நாடுகளின் குழுவில் பிரித்தானியா முதல் உறுப்பினராக மாறும். பிரித்தானியாவைத் தவிர, பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த வாரம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும் என்று […]













