காசாவில் உணவுக்காக உயிரை விட்ட 743 பாலஸ்தீனியர்கள்
காசா சுகாதார அமைச்சின் புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த சில வாரங்களாக காசா பகுதியில் உணவு பெற முயன்ற 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் ஒரு சர்ச்சைக்குரிய உதவித் திட்டத்திற்கு மீண்டும் கண்டனத்தைத் தூண்டியுள்ளது. காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) விநியோக தளங்களில் உதவி கோரும் போது 743 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 4,891க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே மாத இறுதியில் குண்டுவீச்சுக்குள்ளான பாலஸ்தீனப் பகுதியில் செயல்படத் […]













