இலங்கை 4: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் – சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட பத்து பெண் மற்றும் இரண்டு ஆண் சந்தேக நபர்களை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது. இந்த சந்தேக நபர்கள் மீது விசாரணைகளை நடத்திய பயங்கரவாத புலனாய்வுப் பணியகம், அதன் விசாரணைகளை முடித்து, கண்டுபிடிப்புகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தது. சட்டமா அதிபரிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இந்தப் புகாரை முடித்து வைப்பதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். அதன்படி, கொழும்பு […]













