நடுவானில் ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் : அச்சத்தில் பயணிகள்!
இந்திய விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்த போது ஆலங்கட்டி மழையில் சிக்கியுள்ளது. பின்னர் குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய தலைநகர் புது தில்லியில் இருந்து இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் மிகப்பெரிய நகரமான ஸ்ரீநகருக்கு பயணித்த இண்டிகோ விமானமே மேற்படி அசம்பாவிதத்தை எதிர்கொண்டது. “விமானம் மற்றும் கேபின் குழுவினர் நிறுவப்பட்ட நெறிமுறையைப் பின்பற்றினர், மேலும் விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் என்ன சேதத்தை சந்தித்தது என்பதை அறிக்கையில் குறிப்பிடவில்லை, […]













