சிவப்பு எச்சரிக்கையின் கீழ் பிரான்ஸ் – சுற்றுலாத் தலங்களை மூட தீர்மானம்
ஐரோப்பிய நாடுகளை மற்றுமொரு வெப்ப அலை தாக்கியுள்ளமையால் பாரிஸின் ஈபிள் கோபுரம் மற்றும் லூவர் அருங்காட்சியகம் ஆகியவை இந்த வார இறுதியில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் வெப்பநிலை உச்சம் தொடும் என கணிக்கப்பட்டுள்ளமையால் ஈபிள் கோபுரம் 04.00 மணிக்கு முன்னதாகவே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், லூவர் அருங்காட்சியகமும் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மியூசி டி’ஓர்சே கலைக்கூடமும் (Musée d’Orsay) இன்று முதல் வரும் புதன்கிழமை வரை மாலை 5 மணி முதல் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு பிரான்ஸ் முழுவதும் உள்ள 24 மாகாணங்களில் சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




