அறிவியல் & தொழில்நுட்பம்

Gmail பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

  • May 3, 2025
  • 0 Comments

உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவை ஜிமெயில். எளிமையான செயல்பாடும், வலுவான பாதுகாப்பு அம்சங்களும் இதன் சிறப்பு. ஆனால், தொழில்நுட்பம் வளர வளர இணையக் குற்றவாளிகளின் வழிமுறைகளும் மேம்பட்டு வருகின்றன. குறிப்பாக, ‘ஃபிஷிங்’ எனப்படும் தரவு திருட்டுத் தாக்குதல்கள் இப்போது மிகவும் அதிநவீனமாக மாறியுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) வருகைக்குப் பின் இந்த ஆபத்து புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வழக்கமான ஃபிஷிங் மின்னஞ்சல்களைக் கண்டுபிடிப்பது ஓரளவு எளிது. ஆனால், ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் மோதல் – இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி

  • May 3, 2025
  • 0 Comments

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் நெருக்கடி இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் குறிப்பிடத்தக்க பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நெருக்கடி காரணமாக விமானப் பாதைகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இயக்கச் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வான்வெளியை மூட இந்திய அரசு எடுத்த முடிவின் காரணமாக, ஐரோப்பாவிற்குச் செல்லும் விமானங்கள் வேறு வழிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் […]

விளையாட்டு

இந்திய அணியில் சாய் சுதர்சனை சேர்க்க வேண்டும்: ரவி சாஸ்திரி

  • May 3, 2025
  • 0 Comments

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியா தனது முதல் தொடரை இங்கிலாந்து அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கடந்த சுழற்சியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் உள்நாட்டில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு […]

ஆசியா

இந்தியா – பாகிஸ்தானில் ஆபத்தான அளவை நெருங்கும் வெப்பநிலை – மில்லியன் கணக்கானோர் பாதிப்பு

  • May 3, 2025
  • 0 Comments

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெப்பநிலை ஆபத்தான அளவை நெருங்கி வருகிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு கோடை வெப்பத்தின் சீக்கிர வருகை ஒரு ஆபத்தான யதார்த்தமாக மாறியுள்ளது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை சோதித்து வருவதாகவும், எரிசக்தி விநியோகம், அத்தியாவசிய பயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மே மற்றும் ஜூன் மாதங்களில், இரு நாடுகளும் கடுமையான வெப்ப அலைகளை அனுபவித்தன, ஆனால் இந்த ஆண்டு வெப்ப […]

இலங்கை

இலங்கையில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

  • May 3, 2025
  • 0 Comments

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய […]

ஆசியா

சீனாவுடனான வர்த்தகப் போர் – அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டங்காணும் என எச்சரிக்கை

  • May 3, 2025
  • 0 Comments

சீனாவுடனான வர்த்தகப் போரால் கடும் அமெரிக்க துறைமுகங்கள் பாதிப்புக்குள்ளாகக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்குக் கரையில் உள்ள துறைமுகங்களிலேயே இந்த பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து வரும் பொருட்களின் அளவு குறையக்கூடும் என்பதால் கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறையலாம் என்று துறைமுகத் தலைவர்கள் கூறுகின்றனர். இதனால் வேலைகள் பாதிக்கப்படலாம். விலைவாசி அதிகரிக்கக்கூடும். அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டங்காணும் என்று முன்னுரைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சீனாவிலிருந்து வரும் பல மில்லியன் கணக்கான பொருள்கள் ஆக்லந்து துறைமுகத்தில் முதலில் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த 800,000 டொலர் மதிப்புள்ள நாணயங்கள்

  • May 3, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொரியிலிருந்து 800,000 டொலர் மதிப்புள்ள நாணயங்கள் வீதியில் சிதறியுள்ளது. சம்பவம் நேற்று முன்தினம் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாநிலம், அல்வோர்ட் (Alvord) பகுதியில் நடந்தது. விபத்தில் ஓட்டுநரும் பயணியும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். நாணயங்களை அப்புறப்படுத்த நெடுஞ்சாலையின் சில தடங்கள் மூடப்பட்டன. காலை 5.30 மணி முதல் ஊழியர்கள் நாணயங்களை அகற்ற பெரும்பாடுபட்டனர். மாலை 7 மணிக்குப் பிறகு நெடுஞ்சாலை முழுவதுமாகத் திறக்கப்பட்டது. சம்பவம் குறித்து அமெரிக்க நாணயச் சாலை கருத்துத் தெரிவிக்கவில்லை.

ஐரோப்பா

உலகின் மிக வயதான நபராக பெயரிடப்பட்ட பிரித்தானிய பெண்

  • May 3, 2025
  • 0 Comments

உலகின் மிக வயதான நபராக பிரித்தானிய பெண் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளார். எதெல் கெட்டர்ஹர்ம் என அழைக்கப்படும் 115 வயதுடைய பெண் ஒருவரே பெயரிடப்பட்டுள்ளார். பிரேசிலில் 116 ஆண்டுகள் வாழ்ந்த புத்த கன்னியாஸ்திரி கனபரோ லூகாஸ், அவரது மறைவுக்குப் பிறகு உலகின் மிக வயதான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். 1909ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதியன்று ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த எதெல் கேட்டர்ஹாம், ஏழாம் எட்வர்ட் மன்னரின் ஆட்சிக் காலத்தில் பிறந்த கடைசி உயிருள்ள நபராகக் […]

இலங்கை செய்தி

இலங்கையில் ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • May 3, 2025
  • 0 Comments

இலங்கையில் ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் இடைநிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் வேன் மற்றும் லாரி மோதி விபத்து – 7 பேர் பலி

  • May 2, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா அருகே பயணிகள் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஏழு பேர் உயிரிழந்ததாக அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர். கிழக்கு இடாஹோவில் உள்ள ஹென்றி ஏரி அருகே 14 பேரை ஏற்றிச் சென்ற வேன் மீது பிக்அப் லாரி மோதியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். “வேனில் இருந்த ஆறு பேரும், லாரியின் ஓட்டுநரும் விபத்தின் விளைவாக இறந்தனர்” என்று இடாஹோ மாநில காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. “காயங்களின் தீவிரம் காரணமாக” பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு […]

error: Content is protected !!