இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி!
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும் என்றும், அதை அடக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் […]













