பேச்சுவார்த்தைக்காக உளவுத்துறைத் தலைவரைக் கத்தாருக்கு அனுப்பியது இஸ்ரேல்
ஹமாஸ் போராளிகள் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலியக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தனது உளவுத்துறையான ‘மொசாட்’ அமைப்பின் தலைவரை இஸ்ரேல் கத்தாருக்கு அனுப்பிவைத்துள்ளது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் பலர் இறந்தனர். இஸ்ரேலியர்கள் பலரை ஹமாஸ் போராளிகள் பிடித்துச் சென்று பிணைக் கைதிகளாக அடைத்துவைத்துள்ளனர். 251 பேரை ஹமாஸ் பிணை பிடித்ததாகக் கூறப்படுகிறது.அவர்களில் 116 பேர் காஸாவில் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.42 பிணைக் கைதிகள் […]













