இலங்கை செய்தி

மன்னாரில் முன்னாள் போராளி உயிரிழப்பு

  • July 6, 2024
  • 0 Comments

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  அடம்பன்  பகுதியில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். பல்துறை ஆளுமை மிக்க ‘கம்பிகளின் மொழி பிறேம்’ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் (வயது-42) என்ற குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அடம்பன்  வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். இதன்போது தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று […]

இலங்கை செய்தி

பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ள சொகுசு BMW கார் மீட்பு

  • July 6, 2024
  • 0 Comments

ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான குஷ் மற்றும் கொக்கைன் ஆகியவற்றை விமான அஞ்சல் மூலம் இறக்குமதி செய்து கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபரின் சொகுசு வீட்டின் கேரேஜில் மாடல் அழகி பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட BMW சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருதானை பிரதேசத்தில் பிரதான வாகன உதிரி பாகங்கள் இறக்குமதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய இந்த கோடீஸ்வர வர்த்தகர் சில காலமாக பொலிஸாருக்கு தெரியாமல் தலைமறைவாக இருந்ததாகவும், பொலிஸ் […]

இலங்கை செய்தி

அடுத்த வாரம் பல அரசு ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானம்

  • July 6, 2024
  • 0 Comments

அரச சேவையில் உள்ள பல தொழில் வல்லுநர்கள் எதிர்வரும் 9ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் அன்றைய தினம் சுகயீன விடுமுறை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை, சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா […]

இலங்கை செய்தி

அடுத்த தேர்தலில் விரல்களுக்கு வர்ணம் பூச வேண்டியதில்லை

  • July 6, 2024
  • 0 Comments

தேர்தல்களின் போது விரல் வர்ணம் பூசும் முறை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரும், பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடவடிக்கைகளின் போது ஆட்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் கணினி மயமாக்கப்பட்டு வருவதால், ஒருவர் இரண்டு இடங்களில் வாக்களித்து பதிவு செய்தால், அவர் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார் என ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அதன்படி, விரல்களுக்கு வர்ணம் பூச வேண்டிய அவசியம் இல்லை […]

செய்தி மத்திய கிழக்கு

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசேகியன் வெற்றி

  • July 6, 2024
  • 0 Comments

ஈரானிய ஜனாதிபதித் தேர்தலில் பழமைவாத அரசியல்வாதியான சைட் ஜலிலியை விட ஈரானிய இதய அறுவை சிகிச்சை நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மசூத் பெசேகியன் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூத் பெசேகியன் 16.3 மில்லியன் வாக்குகளைப் பெற்று ஜலிலியின் 13.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று ஆரம்பம் கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், முதல் சுற்றில் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை எவராலும் பெற முடியவில்லை. ஈரான் அதிபர் இப்ராகிம் […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இலங்கையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

  • July 6, 2024
  • 0 Comments

அடுத்த வருடம் முதல் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுக் கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜப்பானிய ஊடகமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சீன ஆய்வுக் கப்பல் ஒன்று நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் தனது கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை தடை விதித்துள்ளது. இலங்கையில் பயன்படுத்தப்படாத […]

பொழுதுபோக்கு

விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம் திறந்தார் நாகர்ஜுனா

  • July 6, 2024
  • 0 Comments

நாகர்ஜுனா தனது வாழ்க்கையில் நடந்த மிகவும் வேதனையான சம்பவம் குறித்து ஒரு பேட்டியில் முதல் முறையாக மனம் திறந்து பேசினார். நாகார்ஜுனா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தார். நாகார்ஜுனா முதலில் நடிகர் வெங்கடேஷின் சகோதரி டகுபதி லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் நாக சைதன்யா. தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அவர்கள் 1984 இல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி 1990-ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். […]

இலங்கை செய்தி

கை, கால்கள் இன்றில் கால்வாயில் காணப்பட்ட சடலம்

  • July 6, 2024
  • 0 Comments

கலாவெவ தேசிய பூங்காவில் உள்ள கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் கல்கிரியாகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்று (06) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்கிரியாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கலாவெவ தேசிய பூங்காவிற்கு சொந்தமான பலலுவெவ இஸ்மத்தே கல்கொடவல பிரதேசத்தில் உள்ள கால்வாயில் சடலம் மிதந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், உடலில் இருந்து இரண்டு கைகள் மற்றும் ஒரு […]

செய்தி விளையாட்டு

ஜிம்பாப்வே அணியிடம் படுதோல்வியை சந்தித்து இந்தியா

  • July 6, 2024
  • 0 Comments

2024 டி20 உலக சாம்பியனான இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இன்று (06) வெற்றி பெற்றது. இந்தியாவை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே றெ்றிபெற்றுள்ளது. இப்போட்டியில்  நாணய சுழற்சியில் வென்ற இந்தியா, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது. கிளைவ் மடாண்டே 29 ஓட்டங்களையும், டியான் மியர்ஸ் 23 […]

இந்தியா

2024-2025 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் இந்திய நிதியமைச்சர்!

  • July 6, 2024
  • 0 Comments

2024-25ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வரும் 23 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளார். வரும் ஜூலை 22ம் திகதி முதல் ஆகஸ்ட் 12ம் திகதி வரை பாராளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் திகதி மத்திய வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது.