வட அமெரிக்கா

பைடனுக்குப் பதில் கமலா ஹாரிஸ்; ஆவலுடன் பூர்வீக கிராம மக்கள்

  • July 6, 2024
  • 0 Comments

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனுக்கு மாற்றாக தற்போதைய துணை அதிபராக உள்ள கமலா ஹாரிசுக்கு வாய்ப்பு கிடைக்குமா என வாஷிங்டன் நகரிலிருந்து 12,900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென் இந்தியாவின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மன்னார்குடி வட்டாரத்தில் அமைந்துள்ள கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமம் துளசேந்திரபுரம்.அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றபோது கிராமமே அல்லோலகல்லோலம் பட்டது.அவரை வாழ்த்தும் பதாகைகளை ஏந்தியும் பட்டாசுகளை வெடித்தும், கோயிலில் வழிபட்டும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.இம்முறை […]

ஐரோப்பா

கைவிடப்படும் ருவாண்டா திட்டம் : பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

  • July 6, 2024
  • 0 Comments

பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றியுள்ளார். இதன்போது வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நாங்கள் தீர்மானிக்கப்படுவோம் என்பதை முழு அமைச்சரவைக்கும் நான் நினைவூட்டினேன்  என்று அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில், நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும் விவாதித்தேன். நமக்குத் தேவையான மாற்றங்களைச் செயல்படுத்த மிஷன் டெலிவரி போர்டுகளை நாங்கள் வைத்திருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன், […]

இலங்கை

சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து

  • July 6, 2024
  • 0 Comments

அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். வெல்லவாய பொது மைதானத்தில் இன்று (06) உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாரு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே சம்பளத்தை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.

இந்தியா

இந்தியாவில் HIV தொற்றால் 47 மாணவர்கள் மரணம்; 828 பேருக்கு தொற்று உறுதி

  • July 6, 2024
  • 0 Comments

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் எச்ஐவி தொற்றால் 47 மாணவர்கள் உயிரிழந்துவிட்டதாக வெளியான தகவல் பேரதிர்ச்சி அளித்துள்ளது. திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் உயரதிகாரி ஒருவரைச் சுட்டி, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஐந்து முதல் ஏழு பேருக்கு எச்ஐவி தொற்று கண்டறியப்படுவதால் நிலைமை மோசமாகி வருவதாகச் சொல்லப்படுகிறது. “இதுவரை 828 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 572 பேர் உயிருடன் உள்ளனர்; 47 பேர் […]

ஐரோப்பா

இறுதி நாளன்று சைக்கிளில் எளிமையாக வெளியேறிய நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர்

  • July 6, 2024
  • 0 Comments

ஐரோப்பிய தேசமான நெதர்லாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மார்க் ரூட். இவர் ஒரு வலதுசாரி ஆதரவாளர். இந்த நிலையில் மார்க் ரூட், வரும் அக்டோபர் மாதம் நேட்டோ பொதுச் செயலாளராகப் பதவியேற்கவுள்ளார். முன்னதாக, தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அடுத்த நெதர்லாந்து பிரதமராக டிக் ஸ்கூஃப் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, அந்த நாட்டு மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தி ஹேக் நகரில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில், […]

இலங்கை

இலங்கையில் கிழமையில் இருநாட்களில் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

  • July 6, 2024
  • 0 Comments

இலங்கையில் சம்பள உயர்வு கோரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்  திங்கட்கிழமை (08) மற்றும் செவ்வாய்கிழமை (09) ஆகிய இரண்டு நாள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பல மாநில மற்றும் அரை மாநில தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம், ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் […]

உலகம்

இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிப்பு: அமெரிக்க யோசனையை ஏற்ற ஹமாஸ்

  • July 6, 2024
  • 0 Comments

இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா முன்வைத்திருக்கும் யோசனையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டு உள்ளது.ந்தப் பிணைக்கைதிகளில் ராணுவ வீரர்களும் சிலர் அடங்குவர். காஸா போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் முதற்கட்ட உடன்பாடு ஏற்படுத்தப்பட்ட 16 நாள்கள் கழித்து புதிய யோசனையை ஹமாஸ் ஏற்றிருப்பதாக அந்தப் போராளிக் குழுவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் ஜூலை 6ஆம் திகதி கூறினர். உடன்பாட்டில் கையெழுத்திடும் முன்பு நிரந்தர போர்நிறுத்தத்திற்கு முதலில் இஸ்ரேல் உடன்பட வேண்டும் என்று இதற்கு முன்னர் தான் […]

ஆசியா

சீனாவை தாக்கிய சூறாவளி : ஐவர் உயிரிழப்பு , பலர் படுகாயம்!

  • July 6, 2024
  • 0 Comments

சீனாவின் கிழக்கு மாகாணமான ஷான்டாங் நகரில் சூறாவளி தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டோங்மிங் மற்றும் ஜுவான்செங் மாவட்டங்கள் உட்பட ஹெஸ் நகரின் சில பகுதிகளை சூறாவளி தாக்கியது. இதில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், 80இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ செய்தி தளம் அறிவித்துள்ளது. 2,820 வீடுகள், 48 மின் இணைப்புகள் மற்றும் 4,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் தொடர்பு, மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் […]

இலங்கை

மறைந்த இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை நாளை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை நாளை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. இரா.சம்பந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நேற்று முதல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இரா. சம்பந்தன் கடந்த ஞாயிற்று கிழமை நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராகவும் இவர் திகழ்ந்து வந்தவர். இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் […]

ஐரோப்பா

போரில் 120,000 ரஷ்ய வீரர்கள் பலி: இராணுவஇழப்புகளை இரகசியமாக வைத்திருக்கும் உக்ரைன்

2022 ஆம் ஆண்டில் உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 120,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று வெளியிடப்பட்ட சுதந்திர ஊடக நிறுவனங்களான Mediazona மற்றும் Meduza ஆகியவற்றின் கூட்டு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ரஷ்ய இராணுவத்தின் இழப்புகள் 39,000 பேரால் அதிகரித்துள்ளது. இறப்புகளின் சராசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: முன்பு, ஒரு நாளைக்கு சுமார் 120 பேர் இறந்தனர்; இப்போது அது 200 முதல் 250 பேர்” என்று மீடியாசோனா தெரிவித்துள்ளது […]