இலங்கை செய்தி

மன்னார் சிறுமி கொலை வழக்கு – சந்தேகநபரை கைது செய்ய பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

  • June 1, 2024
  • 0 Comments

தேடப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். இந்த சந்தேக நபர் தலைமன்னார் பிரதேசத்தில் 9 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர். சிறைச்சாலையில் இருந்தபோது சுகயீனமடைந்து சிகிச்சை பெற வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அப்துல் ரஹ்மான் எனப்படும் கந்தையா விஜயன் திருகோணமலை, குச்சவெளியை வசிப்பிடமாகக் கொண்டவராவார். […]

இலங்கை செய்தி

இரத்தினக் கற்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • June 1, 2024
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கற்களை தாய்லாந்துக்கு கொண்டு செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணிக்கக் கற்களின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் காலி பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய வர்த்தகர் ஆவார். சந்தேக நபர் கொண்டு வந்த சூட்கேஸில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தினக் […]

விளையாட்டு

தோல்வியால் கண்ணீர் விட்டு அழுத கிறிஸ்டியானோ ரொனால்டோ

  • June 1, 2024
  • 0 Comments

கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபிய அணியின் கேப்டனாக சவுதி ப்ரோ லீக் தொடரில் அவ்வணியை திறமையாக வழிநடத்தி பைனல்ஸ் வரை அழைத்து வந்தார். அதன்படி சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் உள்ள கிங் அப்துல்லா மைதானத்தில் வைத்து நடந்த கிங் கப் சவுதி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் அல்- ஹிலால் அணியை ரொனால்டோவின் அல்- நாசர் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் இறுதிவரை போராடிய அல்- நாசர் அணி பெனால்டி ஷூட்டை தவறவிட்டதன் […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரை தீவைத்து கொலை செய்ய முயற்சி

  • June 1, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில் பெண்ணொருவரை தீ மூட்டி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்ணை அழைத்து வந்த நபர் ஒருவர் அவரை தீ மூட்டி கொழுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தை பார்த்த ஊர் மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தீயை அணைத்து குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். சம்பவத்துடன் […]

ஆப்பிரிக்கா செய்தி

தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாறும் அறிகுறிகள்

  • June 1, 2024
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி, நீண்ட காலமாக ஆட்சி செய்து வரும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தனது நாடாளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் அபாயத்தில் உள்ளது. 91.62% க்கும் அதிகமான வாக்குப்பதிவு மாவட்டங்களில், எண்ணும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், இதனால் ANC இன் வாக்கு சதவீதம் தற்போது 40.98% ஆக இருப்பதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகக் கூட்டணி 21.65%, முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா தலைமையிலான MK கட்சி 13.81%, FF 9.49% வாக்குகளுடன் பின்தங்கியுள்ளது. 1994 இல், […]

இலங்கை

இலங்கை: 2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. க.பொ.த சா/த பரீட்சைகள் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்றன, இதில் 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். 387,648 பேர் பள்ளி விண்ணப்பதாரர்கள், அவர்களில் 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

காசா போரை முடிவுக்கு கொண்டுவர தீர்மானம் – ஹமாஸ் சாதகமாக பதிலளிப்பு

  • June 1, 2024
  • 0 Comments

காஸா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் முன்வைத்துள்ள புதிய பிரேரணையை ஹமாஸ் ஏற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் இது என்பதை வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய மூன்று பகுதி அமைதித் திட்டம் ஆறு வார போர்நிறுத்தத்துடன் தொடங்கும், இதன் போது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காசா பகுதியில் தங்கள் […]

இந்தியா செய்தி

சல்மான் கானை கொலைசெய்துவிட்டு இலங்கைக்கு தப்பி வர சதி – அம்பலமான தகவல்

  • June 1, 2024
  • 0 Comments

பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல சதித் திட்டம் தீட்டியது குறித்த தகவலை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், மகாராஷ்டிர மாநிலம் பன்வெல் என்ற இடத்தில் சல்மான் கானின் காரை தாக்க சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த கும்பலிடம் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருப்பதையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கொலைத் திட்டத்தைச் செயல்படுத்த 60 முதல் 70 பேரின் ஆதரவைப் பெற்று ஒவ்வொருவருக்கும் பல்வேறு பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாக மும்பை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

இலங்கை செய்தி

ஒஸ்மான் ஜெராட்டை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

  • June 1, 2024
  • 0 Comments

ஐ.எஸ்.ஐ.எஸ் சம்பவம் தொடர்பில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவர் பற்றியது. அத்துடன், இணையத்தளத்தில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது […]

செய்தி விளையாட்டு

“இனி கிரிக்கெட் ஆடப் போவதில்லை” – ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்

  • June 1, 2024
  • 0 Comments

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவருக்கு 39 வயது ஆகிறது. தினேஷ் கார்த்திக் கடைசியாக கடந்த மாதம் 2024 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். சர்வதேச அளவில் வங்கதேசத்திற்கு எதிரான 2022 டி20 உலகக் கோப்பை குரூப் சுற்று ஆட்டத்தில் கடைசியாக இந்திய அணிக்காக ஆடி இருந்தார். 2004 செப்டம்பரில் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக […]