ஐரோப்பா

பல பிரித்தானிய பிரமுகர்களுக்கு எதிராக புதிய தடைகளை அறிவித்த ரஷ்யா

ரஷ்யாவிற்குள் நுழைய தடை செய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் பல பிரிட்டிஷ் “ஸ்தாபன பிரமுகர்கள்”, பத்திரிகையாளர்கள் மற்றும் நிபுணர்களை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் சேர்த்துள்ளது, அது அவர்களின் “விரோதமான” நடவடிக்கைகளால் அவ்வாறு செய்வதாகக் கூறியுள்ளது. உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவை கைவிடுமாறு லண்டனை வலியுறுத்துவதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

5 வருடத்திற்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் கிராக் ஹீரோயின்… ஒரே பேய் படமா தேடுறாங்களே…

  • June 4, 2024
  • 0 Comments

பத்ரி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் கலக்கிய பூமிகா சாவ்லா இப்பொழுது பல படங்களில் கமிட்டாகி வருகிறார். பிரதர், ஸ்கூல், என தமிழ் படங்களிலும். தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்சனைகள் செய்தவர் இன்று எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் பெயரை காப்பாற்றுகிறார். இவர் முன்பு திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுவதும், சிரிப்பதுமாய் வித்தியாசமாக நடந்து கொள்வார்ராம் . வெளியூருக்கு சூட்டிங் சென்றாலும் திடீரென எஸ்கேப் ஆகி […]

இலங்கை

இலங்கையில் தீவிர வானிலை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக, நாடளாவிய ரீதியில் 23,422 குடும்பங்களைச் சேர்ந்த 120,000ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், பல பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த ஏழு முக்கிய அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. 1. சீரற்ற […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் முக்கிய மருத்துவமனைகளில் சைபர் தாக்குதல்!

  • June 4, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் முக்கிய வைத்தியசாலைகள் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிங்ஸ் காலேஜ் மருத்துவமனை, கைஸ் மற்றும் செயின்ட் தாமஸ், ராயல் ப்ரோம்ப்டன் மற்றும் எவெலினா லண்டன் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் முதன்மை பராமரிப்பு சேவைகள் ஆகியன சைபர் தாக்குதல்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் சேவைகளை வழங்குவதில் “பெரிய தாக்கத்தை” ஏற்படுத்துவதாக அறக்கட்டளைகள் தெரிவித்தன, குறிப்பாக இரத்தமாற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. சில நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது மற்ற NHS வழங்குநர்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன,

இந்தியா

இந்திய மக்களவைத் தேர்தல் : பாஜக 290, காங்கிரஸ் 235 தொகுதிகளில் முன்னிலை

2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை சரியாக 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 290 இடங்களில் முன்னிலையில் உள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, அனுராக் தாக்குர், பிரஹலாத் ஜோஷி, ஜோதிராதித்யா சிந்தியா, கிஷன் ரெட்டி மற்றும் கங்கனா ரணாவத், […]

இந்தியா

மக்களவை தேர்தல் ; பாஜக-வின் கனவைத் தகர்த்த உத்தரப் பிரதேசம்

  • June 4, 2024
  • 0 Comments

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அதிலும், பாஜக அணிக்கு 340 தொகுதிகளிலாவது வெற்றி கிடைக்கும் என்றுதான் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால், இந்த கணிப்புகளை உத்தரப் பிரதேச மக்கள் மாற்றி அமைத்துள்ளனர். அது மட்டுமல்ல, பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போகவும் காரணமாகிவிட்டனர். குஜராத் மாநிலத்துக்குப் பிறகு பாஜகவின் கோட்டையாக கருதப்பட்டது உத்தரப் பிரதேச மாநிலம்தான்.மொத்தம் 80 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில், பாஜக குறைந்தபட்சம் 62 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று […]

இந்தியா

மோடி பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் – மம்தா பானர்ஜி!

  • June 4, 2024
  • 0 Comments

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இதேவேளை பாஜக மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.  

ஆசியா

பலூன் அச்சுறுத்தலை தொடர்ந்து எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் தென்கொரியா

  • June 4, 2024
  • 0 Comments

இரு கொரியாக்களையும் வடமேற்கு தீவையும் பிரிக்கும் எல்லையில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்கப் போவதாக தென்கொரிய ராணுவம் செவ்வாய்க்கிழமை (ஜீன் 4) தெரிவித்தது. முன்னதாக வடகொரியாவுடனான ராணுவ ஒப்பந்தத்தை இடைக்காலமாக ரத்து செய்வதாக தென்கொரியா அறிவித்தது. அந்நாட்டின் அதிபர் யூன் சுக்-இயோல் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். வடகொரியா குப்பை நிறைந்த ஆயிரக்கணக்கான பலூன்களை தென்கொரியாவுக்கு அனுப்பி வருவதைத் தொடர்ந்து ராணுவ ஒப்பந்தத்தை தென்கொரியா நிறுத்திவைத்துள்ளது. “வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு பதிலடியாக மக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து […]

ஐரோப்பா

இடம்பெயர்வு விதிகளை கடுமையாக்கும் போர்ச்சுகல்

மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, சில குடியேற்ற விதிகளை கடுமையாக்கும் போர்ச்சுகல் ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது. “நியாயமான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க எங்களுக்கு உதவ விரும்பும் போர்ச்சுகலில் உள்ளவர்கள் எங்களுக்குத் தேவை” என்று போர்ச்சுகல் பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ கூறியுள்ளார். குடியேற்றத்தில் கடுமையாக இருப்பதன் மூலம் தீவிர வலதுசாரிகளின் எழுச்சியைத் தடுக்க அரசாங்கங்கள் முயற்சிப்பதால், ஐரோப்பாவின் பெரும்பகுதி அரசியலில் வலதுசாரி மாற்றத்தை இந்தத் திட்டம் விளக்குகிறது..

உலகம்

கடற்கரைகளில் தோன்றும் மர்ம மீன்கள்!

  • June 4, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் கடற்கரை பகுதியில் விஷமுள்ள முதுகெலும்புகள் கொண்ட மர்ம மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன. குறித்த மீன் போன்று 50 வகையான மீனினங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலவற்றில் மின்சாரத்தை உருவாக்கும் உறுப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் வேல்ஸில் ஏலியன் வகை மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நார்த் வேல்ஸில் உள்ள பார்மவுத் பகுதியில் இந்த மீன் இனம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.