இலங்கை

இலங்கையில் ஒரே கருவில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்

  • May 23, 2024
  • 0 Comments

ஒரே கருவில் இருந்து நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரலாற்றில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலா ரஞ்சனி இதனை தெரிவித்தார். மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற 25 வயதுடைய தாயே மூன்று பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

இலங்கை செய்தி

இலங்கையில் சீரற்ற காலநிலை – 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கான மின்சாரம் தடை

  • May 23, 2024
  • 0 Comments

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. மின்சார செயலிழப்புகள் மற்றும்மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்காக மேலதிக பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வாழ்வியல்

நகங்களை வைத்து புற்றுநோய் அறிகுறிகளை கண்டுபிடிக்கலாம்

  • May 23, 2024
  • 0 Comments

உயர்த்தும் அரிய மரபணுக் கோளாறுக்கும் இடையே ஒரு புதிய தொடர்பைக் கண்டுபிடித்துள்ளனர். இது “தோல், கண்கள், சிறுநீரகங்கள், மார்பு மற்றும் அடிவயிற்றில் உள்ள திசுக்களில் புற்றுநோய் கட்டிகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது” என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலை நகத்தின் வெள்ளை அல்லது சிவப்பு நிற கோடுகளை ஏற்படுத்துகிறது, BAP1 கட்டி முன்கணிப்பு நோய்க்குறி எனப்படும் இந்த நிலை, BAP1 மரபணுவில் உள்ள பிறழ்வுகளிலிருந்து உருவாகிறது, இது பொதுவாக கட்டிகளைத் தடுக்க உதவுகிறது. NIH மருத்துவ மையத்தில் […]

இலங்கை

இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு! 18,000இற்கும் அதிகமான பொலிஸார் பணியில்

  • May 23, 2024
  • 0 Comments

இலங்கை முழுவதும் விசாக பூரணை தினத்தை முன்னிட்டு விசாக தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இதற்காக 18,000இற்கும் அதிகமான பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்களும் 321 விசாக தோரணைகளும் அமைக்கப்பட்டுள்ளன. விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் 3,000இற்கும் அதிகமான தானசாலைகள் ஏற்பாடு […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 2வது நபருக்கு பறவைக் காய்ச்சல் – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

  • May 23, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். அங்கு மார்ச் மாதம் பறவைக் காய்ச்சல் வைரஸ் முதன்முறையாக மாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மனிதர்களிடையே ஏற்பட்ட இரண்டாவது சம்பவம் அதுவாகும். அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் அதனைத் தெரிவித்தது. ஏப்ரல் மாதத்தில் டெக்சஸ் மாநிலப் பால் பண்ணை ஊழியருக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அண்மையில் மிச்சிகன் (Michigan) மாநிலப் பால் பண்ணை ஊழியருக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டது. ஆயினும் பொதுமக்களுக்குக் […]

விளையாட்டு

சமூக ஊடகங்களால் வீண் சர்ச்சை – தோனி வெளியிட்ட தகவல்

  • May 23, 2024
  • 0 Comments

சி எஸ் கே அணி தங்கள் கடைசி லீக் போட்டியில் ஆர் சி பி அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் மிகச்சிறந்த பினிஷரான தோனி இருந்த போதும் அவரால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இந்த போட்டி முடிந்த போது மிகவும் அதிருப்தியோடு காணப்பட்டார். அவர் அணி வீரர்களோடு கூட அதிகமாக எதுவும் பேசவில்லை என சொல்லப்படுகிறது. உடனடியாக […]

ஆசியா செய்தி

விமானத்தில் உயிரிழந்த பயணி – பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரி

  • May 23, 2024
  • 0 Comments

லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற விமானம் குலுங்கியதில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். இந்நிலையில், விமானத்தில் 73 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்திற்குள் ஏற்பட்ட இந்த கொந்தளிப்பான சூழ்நிலையால் மேலும் 71 பயணிகள் காயமடைந்துள்ளனர். 7 பயணிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அந்த விமானத்தில் 211 பயணிகளும் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் மான் குட்டிகளைப் படம் எடுக்க முயன்ற நபருக்கு நேர்ந்த கதி

  • May 23, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் மான் குட்டிகளைப் படம் எடுக்க முயன்ற நபரை அவற்றின் தாய் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 70 வயது டேல் சொர்மன் (Dale Chorman) என்று அடையாளம் காணப்பட்டார். இரு நபர்கள் பெண் மானைத் தேடிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுள் டேல் சொர்மனும் ஒருவராகும். அப்போது அந்த மான் டேலைத் தாக்கியதாக தெரியவந்துள்ளது. மற்றோர் நபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை என்றும் அவர் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்தத் தாக்குதலைப் பார்க்கவில்லை என்றும் கூறப்பட்டது. டேல் சம்பவம் நடந்த […]

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

  • May 23, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் வாகனம் ஓட்டும் போது உணவு உண்பதற்கான சாத்தியம் மற்றும் சட்டப்பூர்வமானது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்ணும் போது உங்களின் பயணிகளுக்கோ அல்லது வீதியில் பயணிப்பவர்களுக்கோ ஆபத்தை ஏற்படுத்தினால் சட்டரீதியாக குற்றவாளியாக இருப்பது கட்டாயம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். வாகனம் ஓட்டும் போது சாப்பிடுவது சட்டவிரோதமானது அல்ல என்றாலும், நீங்கள் காரை சரியான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். சாப்பிட வேண்டும் என்றால் காரை 5 நிமிடம் நிறுத்திவிட்டு சாப்பிடுவது நல்லது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். […]

ஐரோப்பா

ஜெர்மனியில் குடியுரிமை பெறுவதனை இலகுவாக்க அமுலாகும் நடைமுறை

  • May 23, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து புதிய ஒன்லைன் தகவல் தளம் மற்றும் விளம்பர பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது. ஜெர்மன் அரசாங்கம் ஒரு புதிய விளம்பர பிரச்சாரம் மற்றும் ஒன்லைன் தகவல் வலைத்தளத்தை தொடங்க உள்ளது, இது ஜெர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான தேவைகள் மற்றும் படிகளை விளக்குகிறது. குடியுரிமைக்கு தேவைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி இந்த தளம் ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் வசிப்பவர்களுக்கு தெரிவிக்கும் என்று கூறுகிறது. ஜெர்மனியின் புதிய இரட்டைக் குடியுரிமைச் சட்டம் – மார்ச் மாதம் […]

error: Content is protected !!