பொழுதுபோக்கு

என்னடா இது… ஆட்ட நாயகன், வேட்டை மன்னன் விஜய் மகனுக்கு வந்த சோதனை

  • May 16, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவையும் தாண்டி, தெலுங்கு, மலையால மொழிகளிலும் வசூல் மன்னனாக ஆட்ட நாயகனாக ஜொலித்து வரும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அடி எடுத்து வைத்திருக்கிறார். அதனால் பெரிய நிறுவனத்துடன் கூட்டணி வைக்கும் விதமாக லைக்காவுடன் இணைந்து முதல் படத்திற்கு அஸ்திவாரம் போட்டார். ஆனால் போட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிய நிலையில் இன்னும் எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இடைப்பட்ட நேரத்தில் இதற்கான ஹீரோவை தேடும் வேலையில் இருக்கிறோம் என்ற தகவல் வெளியானது. அந்த வகையில் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

  • May 16, 2024
  • 0 Comments

இங்கிலாந்து பல்கலைக்கழக கண்காணிப்பு அமைப்பிற்கு சர்வதேச மாணவர்களிடமிருந்து பல்வேறு புகார்கள் கிடைக்கப்பெறுவது சாதனை மட்டத்தில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்தும் மொத்தம் 3,137 புகார்கள் கடந்த ஆண்டில் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. உள்நாட்டு மாணவர்களைக் காட்டிலும் அதிக கல்விக் கட்டணத்தைச் செலுத்தும் சர்வதேச மாணவர்கள், 2023 இல் UK பல்கலைக்கழகங்களைப் பற்றி 1,268 புகார்களை அளித்துள்ளனர். சர்வதேச மாணவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் புகார்கள் ஏறக்குறைய 90 சதவீதமாக காணப்படுகிறது. இது கடந்த […]

உலகம்

இந்திய மசாலா பொருட்கள் மீது எழுந்துள்ள சர்ச்சை! பிரித்தானியாவில் கடுமையாகும் கட்டுப்பாட்டு நடவடிக்கை

பிரித்தானியாவின் உணவு கண்காணிப்பு அமைப்பு, இந்தியாவில் இருந்து வரும் அனைத்து மசாலாப் பொருட்களுக்கும் கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பயன்படுத்தியுள்ளது என்று அறிவித்துள்ளது. இரண்டு பிராண்டுகளுக்கு எதிரான மாசுபாடு குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அனைத்து இந்திய மசாலாப் பொருட்களையும் ஆய்வு செய்வதில் முதன்மையானது, உலகளாவிய உணவு கட்டுப்பாட்டாளர்களிடையே கவலையைத் தூண்டியது. ஹாங்காங் கடந்த மாதம் MDH மற்றும் எவரெஸ்ட் தயாரித்த மூன்று மசாலா கலவைகளின் விற்பனையை நிறுத்தியது, அவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி எத்திலீன் ஆக்சைடு அதிக அளவில் இருப்பதாகக் […]

இலங்கை

மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை – இந்திய இடையேயான படகு சேவை

  • May 16, 2024
  • 0 Comments

இந்தியா – இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் திகதி இந்த படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் சில காரணங்களால் இன்று (17) வரை ஒத்திவைப்பதாக கப்பல் சேவை நிறுவனம் அண்மையில் அறிவித்தது.எனினும் எதிவரும் 19ஆம் திகதி வரை மீண்டும் அந்த படகு சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ள. அந்தமானில் இருந்து நாகைக்கு வரவேண்டிய பயணியகள் கப்பல் தாமதமானதால், இவ்வாறு படகு சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயணத்தை மேற்கொள்வதற்காக […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

இனி மனிதர்களுக்கு மரணமே கிடையாது : சீன விஞ்ஞானிகளின் அசாத்திய கண்டுப்பிடிப்பு!

  • May 16, 2024
  • 0 Comments

சீன விஞ்ஞானிகள் மனித பரிணாம வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக மூளை உறைதலை நீட்டிக்கும் கண்டுப்பிடிப்பை மேற்கொண்டுள்ளனர். இது மனிதர்களின் ஆயுட் காலத்தை நீட்டிக்க வழிசெய்யும் என்று கூறப்படுகிறது. அதாவது சமீபத்திய பரிசோதனையில்  மனித கரு ஸ்டெம் செல்களை 03 வாரங்களுக்கு மேலதிகமாக வளர்த்துள்ளனர். இது நியூரான்கள் மற்றும் நரம்பு செல்கள் செயல்படுவதற்கு போதுமான காலமாகும். இந்த மாதிரிகள் பின்னர் சர்க்கரை, உறைதல் தடுப்பு மற்றும் இரசாயன கரைப்பான்கள் போன்ற பல்வேறு இரசாயன கலவைகளில் ஊறவைக்கப்பட்டுள்ளது. அவற்றை […]

ஐரோப்பா

சுவிஸ் நகரமொன்றில் பயங்கரம்.. பலர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

  • May 16, 2024
  • 0 Comments

வடக்கு சுவிட்சர்லாந்தின் ஜோஃபிங்கன் நகரின் தெருக்களில் நேற்று புதன்கிழமை(15) கத்தியுடன் வந்த ஒரு நபர் பலரைக் காயப்படுத்தியதாக என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அல்லது தாக்குதல் நடத்தியவர் குறித்த எந்த விவரங்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சூரிச்சுக்கு மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் (38 மைல்) தொலைவில் உள்ள அறோ மண்டலத்தில் 12,000 பேர் வசிக்கும் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு வழிப்போக்கர் வருவரையோ அந்த நபர் முதலில் தாக்கியுள்ளார். […]

இலங்கை

இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் : அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

  • May 16, 2024
  • 0 Comments

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரிவுக்குட்பட்ட பல ஊழியர் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரிகளுடன் நேற்று (15.05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொழிற்சங்க பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடமும் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு அனைத்து […]

ஐரோப்பா

சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை ஆரம்பித்தார் புட்டின்!

  • May 16, 2024
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ளார். ரஷ்ய அதிபர் தனது 5-வது பதவிக்காலத்தை தொடங்கிய பிறகு புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் உலக அரசியல், உக்ரைன் போர் மோதல்கள் மற்றும் காஸா போர் குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது. உக்ரைன் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை ரஷ்யாவும் சீனாவும் வலியுறுத்துவதாக புடின் கூறியுள்ளார். மேலும், காஸா போருக்கு இரு நாடுகள் தீர்வு […]

ஐரோப்பா

நியூ கலிடோனியாவில் பிரான்ஸ் அவசர நிலை பிரகடனம்: கலவரத்தில் நால்வர் பலி!

  • May 16, 2024
  • 0 Comments

நியூ கலிடோனியாவில் மே 15ஆம் திகதியன்று நடந்த கலவரத்தில் மூன்று பழங்குடியினரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் இறந்ததை அடுத்து, அங்கு அவசரநிலையை பிரான்ஸ் பிரகடனம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக நம்பப்படும் குறைந்தது நால்வர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரெஞ்சு அதிகாரிகள் கூறினர்.கலவரத்தில் 64 அதிகாரிகள் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டோர் தீவெங்கும் உள்ள சாலைகளில் தடுப்புகளைப் போட்டுள்ளனர்.இதனால் அங்குள்ள மக்களுக்கு மருந்து, உணவு ஆகியவற்றை விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

ஐரோப்பா

ஜேர்மனியில் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ : மூவர் பலி!

  • May 16, 2024
  • 0 Comments

மேற்கு ஜேர்மனியில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். டுசெல்டார்ஃப் நகரில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருவதுடன், ஏணிகளைப் பயன்படுத்தி பால்கனியில் இருந்து பலரைக் காப்பாற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக […]

error: Content is protected !!