ஐரோப்பா

உக்ரைனில் செர்னிகிவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 8 பேர் பலி

  • April 17, 2024
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 2 ஆண்டுகளை கடந்து இன்று 783வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை, டிரோன் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் செர்னிகிவ் […]

பொழுதுபோக்கு

அயோத்தி ராமர் கோயிலில் அதிசயம் – பரவசத்தில் பக்தர்கள்

  • April 17, 2024
  • 0 Comments

ஸ்ரீ ராம நவமி தினமான இன்று (ஏப்ரல் 17) அயோத்தி ராமர் கோயிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள் திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலையின் நெற்றியில் பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த ஜனவரி 22ம் தேதி நடந்தது. இதன் பின், விழா நிறைவடைந்த மறுநாள் முதல், தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், […]

தமிழ்நாடு

திண்டுக்கல் – மதுபோதையில் நேர்ந்த பயங்கரம்… இலங்கை அகதி கழுத்தை நெரித்துக் கொலை!

  • April 17, 2024
  • 0 Comments

திண்டுக்கல் அருகே மதுபோதையில் இலங்கை அகதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபரை, பொலிஸார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே புதுப்பட்டி பகுதியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு ஆனந்தக்குமார் (40) என்பவர் வசித்து வந்தார். பெயின்டரான இவருக்கும் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி ஆனந்தகுமாரின் வீட்டில் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு ஆனந்தக்குமார் வீட்டில் […]

ஐரோப்பா

உக்ரைன் – ரஷ்யா : 50,000 ரஷ்ய துருப்புக்கள் உயிரிழப்பு!

  • April 17, 2024
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன, புள்ளிவிவரங்களின்படி, முதல் ஆண்டை விட ரஷ்ய வீரர்களின் இறப்பு 25% அதிகரித்துள்ளது. 2022 பிப்ரவரியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியது. பிபிசிக்கு கிடைத்த தரவுகளின்படி, இரண்டாம் ஆண்டில் 27,300 ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளனர்.

ஆசியா

‘நுட்பமான கட்டத்தில்’ காசா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள்: கத்தார் அறிவிப்பு

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது பற்றிய பேச்சுவார்த்தை “நுட்பமான கட்டத்தில்” உள்ளது என கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்த்துள்ளார். “இந்த முட்டுக்கட்டையை நிவர்த்தி செய்ய நாங்கள் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார். கத்தாரின் பிரதமர் “கூட்டு தண்டனை” என்ற கொள்கையை இஸ்ரேலின் ஆளும் பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் சமீபத்திய விரிவாக்கத்திற்கு எதிரான போரில் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரான்! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!

  • April 17, 2024
  • 0 Comments

ஈரானின் ஜனாதிபதி, இஸ்ரேலின் “மிகச் சிறிய படையெடுப்பு” ஒரு “பாரிய மற்றும் கடுமையான” பதிலைக் கொண்டுவரும் என்று எச்சரித்துள்ளார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஒரு வருடாந்திர இராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு கூறியுள்ளார். ஏப்ரல் 1 அன்று சிரியாவில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வெளிப்படையான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் மீது வீசியது, இதில் இரண்டு ஈரானிய ஜெனரல்கள் […]

ஆசியா

இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறும் எரிமலை… நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்!

  • April 17, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணம், ருவாங் தீவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறி வருகிறது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி, சுமார் 800 பேர் அத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் மனாடோவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ருவாங் தீவில் உள்ள ஒரு எரிமலை, நேற்றிலிருந்து 3 முறைக்கு மேல் வெடித்துள்ளது. இந்த எரிமலை பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்ததாகவும், தற்போது வெடித்துச் சிதறி வருவதாகவும் அந்நாட்டின் எரிமலை கண்காணிப்பு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக […]

இலங்கை

இலங்கை: 2023 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை அடுத்த வாரம் முதல் விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது பாடசாலைகளின் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் விண்ணப்பதாரிகளுக்கு அஞ்சல் ஊடாக பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளன. எதிர்வரும் மே 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 15 […]

இலங்கை

சாய்ந்தமருந்து – உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு!

  • April 17, 2024
  • 0 Comments

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள், கோழி பதப்படுத்தி விற்கும் இடங்கள் போன்றவற்றில் நேற்று (16) இரவு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச […]

உலகம்

கனடாவில் செல்வந்தர்களுக்கு எழுந்துள்ள சிக்கல்!

  • April 17, 2024
  • 0 Comments

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் மத்திய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக பணக்கார கனடியர்கள் மீது அதிக வரிகளை விதிப்பதாக அறிவித்தது. வரவு செலவுத் திட்டம் மூலதன ஆதாயங்களை உள்ளடக்கிய விகிதத்தை அதிகரிக்க முன்மொழிகிறது, இது சொத்துக்களின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தின் வரிக்குரிய பங்கைக் குறிக்கிறது. புதிய அறிவிப்பின்படி, $250,000 கனடியன் (US$181,000)க்கு மேலான மூலதன ஆதாயங்களின் வரிக்கு உட்பட்ட பகுதி பாதியில் இருந்து மூன்றில் இரண்டு பங்காக உயரும், இது 0.1% கனடியர்களை மட்டுமே பாதிக்கும் என்று […]