ஸ்பெயினில் மூன்றாவது முறையாக உச்சம் தொடும் வெப்ப அலை – காட்டுத்தீ அபாயம்
ஸ்பெயினில் நேற்று முதல் வெப்பநிலை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை (22.07) உச்சம் தொடும் எனவும் அந்நாட்டின் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது ஸ்பெயினில் இந்த கோடைக் காலப்பகுதியில் பதிவாகியுள்ள மூன்றாவது வெப்ப அலையாகும்.
ஸ்பெயினின் தென்கிழக்குப் பகுதியில் வெப்பநிலையானது 45 பாகை செல்சியஸை தாண்டும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அந்தலூசியா, எப்ரோ பள்ளத்தாக்கு, வடகிழக்கு தாழ்நிலப் பகுதிகள், ஜெனில் படுகை மற்றும் மல்லோர்காவின் உட்பகுதி ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் என்றும், இது உடல்நிலை பாதிப்படைய வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலம் மற்றும் காட்டுத்தீ அபாயம் ஆகிய இரண்டும் காணப்படுவதினால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





