திருமண விழாவில் பாகிஸ்தானின் முக்கிய கேங்ஸ்டர் சுட்டுக் கொலை
லாகூர் பாதாள உலகத்தின் முக்கிய நபரும், சரக்கு போக்குவரத்து வலையமைப்பின் உரிமையாளருமான அமீர் பாலாஜ் திப்பு, சுங் பகுதியில் நடந்த திருமண விழாவின் போது அடையாளம் தெரியாத ஆசாமியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தனியார் தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு அல்லாமா இக்பால் விமான நிலையத்தில் ஒரு பயங்கரமான தாக்குதலுக்கு பலியான திப்பு ட்ரக்கன்வாலா என்ற ஆரிஃப் அமிரின் மகன் அமீர் பாலாஜ் திப்பு, துப்பாக்கிச் சூட்டின் போது ஏற்பட்ட காயங்களுக்கு ஆளானார். […]













