செய்தி வட அமெரிக்கா

அவசரமாக தரையிறக்கப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்

  • February 21, 2024
  • 0 Comments

விமானத்தின் இறக்கையின் பகுதிகள் சேதமடைந்ததை பயணிகள் கண்டதை அடுத்து, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பாஸ்டனுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டென்வரில் தரையிறக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு பயணி கெவின் கிளார்க் விமானத்தில் வலது இறக்கை உடைந்திருப்பதை முதலில் கவனித்தபோது இந்த சம்பவம் நடந்தது. ”திடீரென்று, நான் இதுவரை கேள்விப்படாத இந்த நம்பமுடியாத உலோக அதிர்வைக் கேட்டேன். நான் உடனே எழுந்து சென்றேன்,திரு கிளார்க் பின்னர் அவர் தனது ஜன்னலை திறந்து சேதத்தை வீடியோ எடுத்தார். சிறிது நேரத்திற்குப் […]

உலகம் செய்தி

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட எலோன் மஸ்க்

  • February 21, 2024
  • 0 Comments

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X- நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். இதற்கிடையில், நார்வே எம்.பியான சோபி மர்ஹாக், ஜூலியன் அசாஞ்சேவை பரிந்துரைத்தார். அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை […]

ஐரோப்பா

உக்ரைனின் மற்றுமொரு நகரத்தை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனின் தெற்கு Kherson பகுதியில் உள்ள (கிரிங்கி) Krynky கிராமத்தை தனது நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். “ரஷ்ய வான்வழிப் படைகளின் தளபதி மிகைல் யூரிவிச் டினீப்பரின் நதியின் இடது கரையில் உள்ள கிரிங்கி நடைமுறையில் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். புட்டினின் கருத்துக்கள் தொடர்பில் Kyiv இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை, உக்ரைன் நகரமான Avdiivka தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டிற்குள் இருப்பதும் குறிப்பிடத்தகக்கத்து.

விளையாட்டு

AFGvsSL – இலங்கை அணிக்கு 210 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

  • February 21, 2024
  • 0 Comments

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது. தம்புள்ளை – ரங்கிரிய மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Rahmanullah Gurbaz அதிகபட்சமாக 70 ஓட்டங்களையும், Hazratullah […]

ஐரோப்பா

பிரிட்டனில் இந்திய உணவக மேலாளர் சாலை விபத்தில் பலி – 8 பேர் கைது!

  • February 21, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்தியாவைச் சேர்ந்த உணவக மேலாளர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் ரீடிங் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேலாளராக இந்தியாவைச் சேர்ந்த விக்னேஷ் பட்டாபிராமன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.இவர் கடந்த 14ம் திகதி தனது மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சைக்கிளின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த விக்னேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய […]

உலகம்

ஈரான் ஆதரவுடன் நடந்த கொலை: சந்தேக நபரை அமெரிக்காவுக்கு நாடு கடத்திய செக்

ஈரான் அரசாங்கத்தின் முக்கிய விமர்சகரைக் கொலை செய்ய சதி செய்ததற்காக அமெரிக்காவில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை செக் குடியரசு நாடு கடத்தியது என்று செக் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் புதன்கிழமை காலை ப்ராக் வக்லாவ் ஹேவல் விமான நிலையத்தில் பொலட் ஓமரோவ் அமெரிக்க அதிகாரிகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓமரோவ் ஜனவரி 2023 இல் செக் குடியரசில் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒப்படைப்புக்கு ஆதரவாக நீதி அமைச்சர் தீர்ப்பளித்ததாக அமைச்சகம் […]

உலகம்

ஹைதியில் சடலமாக மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர்..!

  • February 21, 2024
  • 0 Comments

கரிபீயன் தீவில் அமைந்துள்ள ஹைதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 11.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஹைதி நாடானது ஆள் கடத்தல், கொலை மிரட்டல், துப்பாக்கி காட்டி கொள்ளையடித்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல், சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல், பெண்கள் மீதான வன்கொடுமை போன்ற குற்றச் செயல் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. ஹைதியில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் தாக்கம் நாளுக்கு நாள் […]

இலங்கை

சத்திர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த 3 வயது குழந்தை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • February 21, 2024
  • 0 Comments

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம், கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் நியாயமான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவல முன்னிலையில் அழைக்கப்பட்டது. அப்போது, ​​பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் […]

இந்தியா

போராட்டத்திற்கு மத்தியில் தீ வைத்துக்கொண்ட விவசாயி!

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் பகுதியில் விவசாயிகள் போராட்டத்திற்கு நடுவில் தன்னைத் தானே தீ வைத்துக் கொள்ள விவசாயி ஒருவர் முயன்றுள்ளார். சக போராட்டக்காரர்களால் தீ அணைக்கப்பட்டு அந்த விவசாயி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற இந்த போராட்டம் முசாபர்நகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சம்பவத்தையடுத்து மாநகர நீதிபதி விகாஸ் காஷ்யப், மருத்துவமனைக்குச் சென்று தீ காயத்துக்கு ஆளான பிரிஜ்பால் என்கிற விவசாயியைச் சந்தித்தார். கடன் சார்ந்த பிரச்னையால் இந்த முடிவுக்கு விவசாயி […]

இலங்கை

மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல்: 17 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 17 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மாணவர்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சி ஒன்றிற்காக ரந்தெம்பே பிரதேசத்தில் உள்ள தேசிய பயிற்சி மையத்திற்கு கொழும்பு , கம்பஹா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இருந்து பாடசாலை மாணவர்கள் சென்றுள்ளனர்.. இதன்போது மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

error: Content is protected !!