பொழுதுபோக்கு

விஜய், சங்கீதா போல் சர்ச்சையில் சிக்கிய அடுத்த ஜோடி..

  • January 24, 2024
  • 0 Comments

கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது. அதாவது விஜய் படத்தின் கதாநாயகிகளை சங்கீதா தான் தேர்வு செய்தாராம். இந்நிலையில் திரிஷாவுடன் ஏற்கனவே ஒரு காலத்தில் விஜய் கிசுகிசுக்கப்பட்டார். இப்போது லியோ படத்தில் மீண்டும் திரிஷாவுடன் விஜய் ஜோடி போட்டிருந்தார். அதனால் தான் விஜய் மற்றும் சங்கீதா இடையே பிரச்சனை ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதோடுமட்டுமல்லாமல் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் சேர்ந்து எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து […]

இலங்கை

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு – கிழக்கு ஆளுநர் அறிவிப்பு!

  • January 24, 2024
  • 0 Comments

இந்தியாவின் தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஓ லையில் நேற்று (23) ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இக்கருத்தை தெரிவித்தார். இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவின் தமிழ்நாட்டில் 40 வருடங்களுக்குமேல் அகதிகளாக வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளுக்கு சர்வதேச ரீதியாக […]

ஆசியா

விரைவில் ஒரு மாததிற்கு இஸ்ரேலும் ஹமாஸும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை.?

இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த உடன்படிக்கையை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுளளது. இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்படும் போது காசாவில் 30 நாள் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலும் ஹமாஸும் நெருங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கத்தார், அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகியவை டிசம்பர் 28 முதல் இராஜதந்திரத்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன, ஆனால் காசா போரை எப்படி நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவது என்பதில் இரு தரப்பினரும் முரண்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தீர்வு காணும் வரை ஹமாஸ் முன்னேற […]

இந்தியா

மணிப்பூரில் அதிர்ச்சி… சக வீரர்கள் அறுவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பாதுகாப்பு படைவீரர் தற்கொலை!

  • January 24, 2024
  • 0 Comments

மணிப்பூரில், அசாம் ரைபிள்ஸ் படைவீரர்கள் 6 பேர் மீது சக வீரர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் ரைபிள்ஸ் படையினர், தெற்கு மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த படைப்பிரிவில் வீரர் ஒருவர் இன்று காலை திடீரென துப்பாக்கியை எடுத்து தனது சக படைவீரர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 6 படைவீரர்களும் படுகாயமடைந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய வீரர், தன்னையும் சுட்டுக் […]

பொழுதுபோக்கு

ஆஸ்கருக்கான தேர்வான இந்திய பரிந்துரை ஆவணப்படம்… குவியும் வாழ்த்துக்கள்!

  • January 24, 2024
  • 0 Comments

ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த ஆவணப்பட பிரிவுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவில் எடுக்கப்பட்ட ‘டூ கில் எ டைகா்’ ஆவணப்படம் இடம் பெற்றுள்ளது. பலரும், இயக்குநருக்கும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆண்டு தோறும் ஆங்கிலத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கான விருதுகளுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து திரைப்படங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டுக்கான ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா வரும் மாா்ச் 10ஆம் திகதி அமெரிக்காவின் […]

வட அமெரிக்கா

கனடாவில் விபத்தில் சிக்கிய விமானம் : 06 பேர் பலி!

  • January 24, 2024
  • 0 Comments

கனடாவில் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில்  06 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனடாவின் வடமேற்கில் உள்ள போர்ட் ஸ்மித் நகரில் இருந்து வடக்கு பகுதியில் உள்ள சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியது. குறித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மீட்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில் […]

இலங்கை

இலங்கையில் வட் வரி அதிகரிப்பு : கறுப்புச் சந்தையை நாடும் மக்கள்!

  • January 24, 2024
  • 0 Comments

நாட்டில் பயன்படுத்திய கார்களுக்கு VAT வரியை சேர்த்துள்ளதால் கறுப்புச் சந்தை உருவாகியுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையின் காரணமாக, முறையான நிறுவனங்கள் பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்வதிலிருந்து முற்றாக விலக வேண்டிய நிலை ஏற்படும் எனவும், இதனால் அரசாங்கம் இதுவரை பெற்று வந்த வரி வருமானத்தையும் இழக்க நேரிடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நான்கு வருடங்களாக வாகன இறக்குமதி […]

இலங்கை

இலங்கை – பெலியத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : ஒருவர் கைது!

  • January 24, 2024
  • 0 Comments

பெலியத்தையில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கு தலைமை தாங்கிய சமன் குமார என்ற 54 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றத்திற்காக வந்த 65-2615 இலக்க ஜீப் வண்டியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்தேக நபர் குற்றம் நடந்த போது வாகனத்தை ஓட்டியவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், அவர் இந்த குற்றத்தை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை […]

இலங்கை

வவுனியாவில் நீதிபதியின் முன்னிலையில் கஞ்சா போதைப்பொருள் எரிப்பு!

  • January 24, 2024
  • 0 Comments

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது, இன்று (24) காலை வேளையில் முன்னெடுக்கப்பட்டது. கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் முடிவுறுத்தபட்ட 12 வழக்குகளில் 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா முன்னிலைப்படுத்தப்பட்டது. வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் , நீதிமன்ற காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் எரிக்கப்பட்டது. சுகாதார நிலமைகளை […]

இலங்கை

இலங்கை : புதிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

  • January 24, 2024
  • 0 Comments

தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு மொழிகளுக்கு அந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. இதேவேளை, 22,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் […]

error: Content is protected !!