இலங்கை : முல்லேரியாவில் இரத்த கரை படிந்த வாளுடன் அறுவர் கைது!
முல்லேரியா களனி ஆற்று மாவத்தை சந்தியில் இரத்தக்கறை படிந்த வாள்களுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று சோதனையிடப்பட்டு 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் இருந்து மூன்று வாள்கள், ஒரு இரும்பு கம்பி, ஒரு கத்தி மற்றும் உயிருள்ள தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது இந்த ஆயுதங்களை கண்டெடுத்ததாகவும் முச்சக்கரவண்டியில் 6 பேர் பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். […]













