இலங்கை

இலங்கையில் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமானதுமே போராட்டங்கள்!

  • January 29, 2024
  • 0 Comments

இலங்கை அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமானதும் பெற்றோருடன் இணைந்து பாரிய பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவினால் அதிகரிப்பது, பாடசாலை மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு கல்விச் செலவுகளை தேவையில்லாமல் சுமத்துவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகின்றார். அபிவிருத்திச் சங்கங்களின் ஊடாக தற்போதைய அரசாங்கத்தினால் பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தும் சுமை […]

இலங்கை

செங்கடல் நெருக்கடி – கொழும்பில் குவியும் கப்பல்

  • January 29, 2024
  • 0 Comments

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, துறைமுகத்தின் கொள்ளளவு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் ஜெயபாலு முனையத்திற்கு விசேட கள விஜயமொன்றை மேற்கொண்ட நிலையில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நிலவும் போர்ச்சுழல் காரணமாக சூயஸ் கால்வாய் ஊடாக பயணிக்கும் வர்த்தக கப்பல்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகிறது. மத்திய கிழக்கு, தெற்காசியா […]

உலகம்

பனாமா கால்வாயை உச்சக்கட்ட வறட்சி – சீர் செய்யும் கோப்பி

  • January 29, 2024
  • 0 Comments

உலகின் முக்கியமான கப்பல் போக்குவரத்துத் தடங்களில் ஒன்றான பனாமா கால்வாயில் கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பல்லாண்டுகளாய் காடுகள் அழிக்கப்படுவதால் நிலத்தின் நீர் உறிஞ்சும் தன்மை சிதைந்து விட்டதெனவும் கோப்பி விவசாயிகள் களமிறங்கி நிலைமையைச் சீர் செய்கின்றனர். பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து அதிகமாகும். உலக வர்த்தகத்தில் சுமார் 5 விழுக்காட்டுக்கு அது பங்களிக்கிறது. தொடரும் வறட்சியால் அதில் பாதிப்பாகும். பனாமா கால்வாய் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உதவுகிறது காப்பி. கால்வாயின் கரையெங்கும் கோப்பி விளைந்துள்ளது. […]

ஆசியா

சீனாவில் ஏற்படவுள்ள மாற்றம் – மீண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகை

  • January 29, 2024
  • 0 Comments

சீனாவில் சனத்தொகை மீண்டும் அதிகரிக்கும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனாவில் நாட்காட்டியின்படி, இந்த ஆண்டு ‘டிராகன் ஆண்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த ஆண்டு வீழ்ச்சியடைந்த சீனாவின் சனத்தொகை இந்த ஆண்டு மீண்டும் அதிகரிக்கும் என, சீனாவின் சனத்தொகை தொகை சங்கத்தின் துணைத் தலைவர் யுவான் ஜிங் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் சனத்தொகை குறைந்து வருவது அந்நாட்டு அரசை கவலையடையச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகத்தின் அறிக்கையின்படி, […]

வாழ்வியல்

மஞ்சள் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • January 29, 2024
  • 0 Comments

மஞ்சள் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு அற்புதமான பொருள் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. மஞ்சளில் குர்குமின் உள்ளதால், பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. மஞ்சளின் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கருத்தில் கொண்டு, ஆயுர்வேதத்தில் இது முக்கியமான ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது. வலியை போக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும், மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால், சில ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள் […]

உலகம்

உலகில் 6 பேரில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை – WHO விடுக்கும் கோரிக்கை

  • January 29, 2024
  • 0 Comments

உலகில் 6 பேரில் ஒருவர் மலட்டுத்தன்மை உடையவர் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மலட்டுத்தன்மையால் அவதிப்படுபவர்களுக்கு குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் வகையில் குழந்தைகளைப் பெற்றெடுக்க செலவு குறைந்த மற்றும் பயனுள்ள சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்த உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. ஒவ்வொரு நாடும் தங்களுக்குத் தேவையான சிகிச்சையை முறையாகவும் உயர்தரமாகவும் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. உலக மக்கள் தொகையில் 17.5 சதவீத முதியோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த […]

ஆஸ்திரேலியா முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பணம் பயன்படுத்துவதை தவிர்க்கும் மக்கள்

  • January 29, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நாணயத்தாள்களின் பயன்பாடு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஃபெடரல் ரிசர்வ் வங்கி குறிப்புகளின்படி, நாணயத்தாள்களின் பயன்பாடு தற்போது சுமார் பத்து சதவீத பரிவர்த்தனைகளுக்கு காரணமாகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து பரிவர்த்தனைகளிலும் நாற்பத்தைந்து சதவீதம் நாணயத்தாள்களை பயன்படுத்தி செய்யப்பட்டது. இலத்திரனியல் வழிமுறைகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய பலர் ஆசைப்படுவதே காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், எதிர்காலத்தில் கரன்சி நோட்டுகளின் பயன்பாடு மேலும் குறையும் என நம்பப்படுகிறது.

ஆசியா

சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிக்கிய பெறுமதியான மர்ம பொருள்

  • January 29, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் – சாங்கி விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 1.2 மில்லியன் டொலர் மதிப்புள்ள காண்டாமிருகக் கொம்புகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவைகளை கடத்திய வெளிநாட்டவருக்கு நேற்று முன்தின இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் வனவிலங்கு பாகங்கள் கடத்தல் தொடர்பான வழக்கில் இன்றுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை இது என தேசிய பூங்கா வாரியம் (NParks) தெரிவித்துள்ளது. 33 வயதான குமேட் ஸ்தெம்பிசோ ஜோயல் என்ற அவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவராகும். அழிந்து வரும் உயிரினங்கள் (இறக்குமதி […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • January 29, 2024
  • 0 Comments

இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் , தற்போது அதிகளவான மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். தொழுநோயை கட்டுப்படுத்தும் வகையில் 10,000 விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சிறுவர்களிடையே பரவும் தொழுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தவகையில், தொழுநோய் தொடர்பில் விழிப்புணர்வை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுளின் மோசமான தரத்தால் அதிருப்தியில் பயனர்கள்!

  • January 29, 2024
  • 0 Comments

தவறான உள்ளடக்கம், அப்ளியேட் மார்க்கெட்டிங் மற்றும் ஸ்பாம் பதிவுகள் ஆகியவற்றால் கூகுளின் தரம் குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வு அமைப்புகள் இணைந்து கூகுளின் தரம் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். இதில் கூகுளில் உள்ள Content-களின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வில் குறைந்த உள்ளடக்கம், அப்ளியேட் மார்க்கெட்டிங் மற்றும் ஸ்பேம் பதிவுகளால் கூகுளின் உள்ளடக்கங்களின் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. குறிப்பாக பொருட்களை பிறருக்கு சந்தைப்படுத்தி பணம் சம்பாதிக்கும் […]

error: Content is protected !!