இலங்கை

செங்கடல் நெருக்கடி – கொழும்பில் குவியும் கப்பல்

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, துறைமுகத்தின் கொள்ளளவு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் ஜெயபாலு முனையத்திற்கு விசேட கள விஜயமொன்றை மேற்கொண்ட நிலையில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிலவும் போர்ச்சுழல் காரணமாக சூயஸ் கால்வாய் ஊடாக பயணிக்கும் வர்த்தக கப்பல்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகிறது. மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசிய பிராந்தியங்களுக்கான கப்பல் பாதையில் முக்கிய துறைமுகமாக கொழும்பு அமைந்துள்ளது.

இந்த நிலையில், கப்பல்களை பாதுகாக்கும் வகையில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு கப்பல் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் நேற்று மாத்திரம் 24 கப்பல்கள் நங்கூரமிடுவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், துறைமுகத்திற்கு வெளியே சுமார் 10 கப்பல்கள் நங்கூரமிட்டு காத்திருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்