இலங்கை முழுவதும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கை : 15000 பேர் கைது!
இலங்கையில் பொலிஸாரினால் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நீதி நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் ஏறக்குறைய 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் ஹெராயின் உட்பட 440 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி சோதனை நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு காணப்பட்டது. இருப்பினும் உரிய அனுமதி இல்லாம் திடீரென சில வீடுகள் முற்றுகையிடப்பட்டது சட்டவிரோதமானது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். […]













