கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட 4 அகதிகளின் சடலம்:விசாரணையை தீவிரப்படுத்திய ஸ்பெயின் போலீசார்
வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரோக்கோ நாட்டை சேர்ந்த 4 அகதிகளின் சடலம் ஸ்பெயின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் ஸ்பெயின் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவிலிருந்து படகுகளில் வெளியேறும் அகதிகள் மேற்கு மத்தியதரைக் கடல் வழியாக, ஐரோப்பாவிற்குள் குடியேற முக்கிய நுழைவுப் புள்ளிகளில் ஒன்றாக ஸ்பெயின் நாட்டில் நுழைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, மொரோக்கோவில் இருந்து படகுகள் மூலம் 32 அகதிகள் புலம்பெயர முயன்றுள்ளனர். இதில், 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என்றும் […]













