உலகம்

லிபியா வெள்ளம் : ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

  • September 22, 2023
  • 0 Comments

லிபியாவின் டெர்னா அணை உடைந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதன்படி 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 10 அம் திகதி லிபியாவில் டேனியல் புயல் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலை டெர்னா அணை உடைப்புக்கு காரணமாகியது. அணை உடைந்த பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கில் ஏறக்குறைய 11000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  அத்துடன் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில், அணையின் நிலைமை குறித்து ஏறக்குறைய 20 […]

இலங்கை

இலங்கையில் இளம் வயதினரிடையே ஏற்பட்டுள்ள ஆபத்து

  • September 22, 2023
  • 0 Comments

இலங்கையில் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 50 வயதுக்குட்பட்ட 100 பேர் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழந்துள்ளதாக கொழும்பு மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை நீதிமன்றத்தினால் கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேத […]

இலங்கை

இலங்கையின் இன்றைய வானிலை….!

  • September 22, 2023
  • 0 Comments

இலங்கையின் பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22.09) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என முன்னுரைத்துள்ளது. ஊவா, மத்திய, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் சில  இடங்களில் மி.மீ. […]

ஐரோப்பா

எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்திய ரஷ்யா!

  • September 22, 2023
  • 0 Comments

உள்நாட்டுச் சந்தையை நிலைப்படுத்துவதற்காக, நான்கு முன்னாள் சோவியத் நாடுகளின் வட்டத்திற்கு வெளியே உள்ள அனைத்து நாடுகளுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியை ரஷ்யா தற்காலிகமாகத் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பெலாரஸ், கஜகஸ்தான், ஆர்மீனியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மாஸ்கோ தலைமையிலான யூரேசிய பொருளாதார ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களின் கீழ் வழங்கப்பட்ட எரிபொருளுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது. “தற்காலிகக் கட்டுப்பாடுகள் எரிபொருள் சந்தையை நிறைவு செய்ய உதவும், இது […]

ஐரோப்பா

ஜெர்மனியில் புதிய வீடுகள் அமைப்பதற்கான நிதி திட்டத்திற்கு ஏற்ப சட்ட திட்டங்கள்!

  • September 22, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் புதிய வீடுகள் அமைப்பது தொடர்பாக வழங்கப்பட இருக்கும் நிதி திட்டத்துக்கு ஏற்ப சட்ட திட்டங்கள் ஒழுங்குப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெர்மனி நாட்டில் புதிய வீடுகள் அமைப்பது தொடர்பில் நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான சட்ட திட்டங்கள் ஒழுங்குப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அரச தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றது. ஜெர்மனியின் கட்டிட நிர்மாண துறை அமைச்சர் கையில் வைஸ் அவர்கள் ஏற்கனவே எரிபொருட்களை சேகரிக்கின்ற புதிய வீடுகளை கட்டுவதற்காக சில நிதி உதவி திட்டங்களை முன்வைத்து இருந்தார். அதாவது 350 […]

இலங்கை

பிரான்ஸில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் Apple ஊழியர்கள்

  • September 22, 2023
  • 0 Comments

பிரான்ஸில் உள்ள Apple கடைகளின் 4 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருக்கின்றன. iPhone 15 ரகத் திறன்பேசி வெளியிடப்படுவதற்கு முன்பு வேலைநிறுத்தம் இடம்பெறவிருக்கிறது. கூடுதல் சம்பளம், மேம்பட்ட வேலைச்சூழல்களை வலியுறுத்தி இன்று மற்றும் நாளை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன். ஊழியர்களின் கோரிக்கையை நிர்வாகம் நிராகரித்துள்ளதாக முன்பு Twitter தளத்தில் அறிக்கை பதிவிடப்பட்டுள்ளது. அதனால் 4 தொழிற்சங்கங்களும் இணைந்து வேலைநிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்

  • September 22, 2023
  • 0 Comments

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 24 ஆம் திகதி காலை 6.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஆசியா செய்தி

74 ஆண்டுகால பங்குச் சந்தை வரலாற்றை முடிவுக்கு கொண்டுவரவுள்ள தோஷிபா

  • September 21, 2023
  • 0 Comments

ஜப்பானின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான தோஷிபா, முதலீட்டாளர்கள் குழு பெரும்பான்மையான பங்குகளை வாங்கியதால், அதன் 74 ஆண்டுகால பங்குச் சந்தை வரலாற்றை முடிவுக்குக் கொண்டுவர உள்ளது. தனியார் பங்கு நிறுவனமான ஜப்பான் இண்டஸ்ட்ரியல் பார்ட்னர்ஸ் (JIP) தலைமையிலான கூட்டமைப்பு அதன் 78.65% பங்குகளை வாங்கியதாக நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் வேர்கள் 1875 ஆம் ஆண்டிலிருந்து, தந்தி உபகரணங்களைத் தயாரிப்பதாக இருந்தது. ஒப்பந்தத்தின் கீழ் அதன் பங்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பங்குச் சந்தையில் […]

இந்தியா செய்தி

திருச்சியில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

  • September 21, 2023
  • 0 Comments

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள தழுதாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு.கூலி தொழிலாளி இவரது மகன் நவீன்குமார் (17). திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். குடும்ப பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு நவீன்குமார், விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று வருவது வழக்கம். அப்படி லால்குடி பகுதியில் வேலைக்கு சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம், ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. […]

இந்தியா செய்தி

கனேடியர்களுக்கான விசாவை நிறுத்தி வைத்துள்ள இந்தியா

  • September 21, 2023
  • 0 Comments

கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், கனேடிய குடிமக்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளது. கனடாவில் உள்ள தனது பணிகளில் “பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்” இடையூறு விளைவிப்பதால் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்தியா கூறியது. ஜூன் 18 கொலைக்குப் பின்னால் இந்தியா இருந்திருக்கலாம் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதை அடுத்து இந்த வாரம் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டின் மூலம் இந்தியாவைத் தூண்டிவிடப் பார்க்கவில்லை என்று திரு […]

error: Content is protected !!