கலைப்பொருட்கள் தொடர்பில் நெதர்லாந்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இலங்கை
வரலாற்றுப் பெறுமதி மிக்க ஆறு தொல்பொருட்களை இலங்கைக்குத் திருப்பியனுப்புவதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் நாளை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் கைச்சாத்திடப்படவுள்ளன. 1765ல் கண்டியில் உள்ள அரச மாளிகையை டச்சுக்காரர்கள் முற்றுகையிட்டபோது இந்த கலைப்பொருட்கள் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தால் எடுத்துச் செல்லப்பட்டன. ஒப்புகை பரிமாற்றம், கடன் ஒப்பந்தங்கள் போன்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தானது நாளை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. ஏப்ரல் 2022 இல் இலங்கை மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த அறிஞர்கள் குழு மேற்கொண்ட ஆய்வின்படி, […]













