இலங்கையின் வங்கிகள் அமைப்பு அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கடன் மீள் அறவிடல் சட்டங்களை மாற்றியமைப்பதற்கு முன்னதாக மாற்றுவழிமுறைகள் குறித்து மத்திய வங்கியின் ஊடாக விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு இலங்கையின் வங்கிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இக்கட்டமைப்பானது, ‘தற்போதைய சூழ்நிலையில் கடனை மீளச்செலுத்தமுடியாததன் விளைவாக வணிக மற்றும் கைத்தொழில் துறையினர் முகங்கொடுத்திருக்கும் அழுத்தங்களை சீரமைப்பதை முன்னிறுத்தி செயற்திறன்மிக்கதும், உரியவாறு ஒருங்கிணைக்கப்பட்டதுமான முறையொன்று கையாளப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான கலந்துரையாடல்களை அரசாங்கம் மத்திய வங்கியின் ஊடாக வர்த்தக வங்கிகளுடன் முன்னெடுப்பது […]













