இலங்கை

சஜித் மன்னிப்பு கோர வேண்டும் – வடிவேல் சுரேஸ்

  • April 24, 2023
  • 0 Comments

பசறை மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு வருகை தாராத எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எனது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ், என் மக்களின் முடிவே என் தீர்க்கமான அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்றும் தெரிவித்தார். பசறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த […]

ஐரோப்பா

உக்ரைன் மருத்துவர்களை ராணுவ சேவைக்கு கட்டாயப்படுத்தும் ரஷ்யா!

  • April 24, 2023
  • 0 Comments

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழும் மருத்துவர்களை, இராணுவ சேவைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.தற்போதும் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் பலரும் வேறு நாடுகளுக்கு புலம்பெயந்துவிட்டனர். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து உக்ரைன் படைகளும் தீவிரமாக போரிடுகிறது. இதனால் ரஷ்ய […]

ஐரோப்பா

பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யா கலந்துகொள்ளுமா – கிரெம்ளின் பதில்!

  • April 24, 2023
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதை விளாடிமிர் புடின் முடிவு செய்வார் என்று கிரெம்ளின் கூறுகிறது. பிரிக்ஸ் மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் சுமூகமான உறவு இருந்தாலும், ஐ.சி.சி நீதிமன்றம் புடினை கைது செய்ய பிடியானை பிறப்பித்துள்ள காரணத்தினால் இந்த மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், வழக்கமான மாநாடு ஒன்றில் இந்த விடயம் குறித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் கேள்வி எழுப்பினார். […]

ஆப்பிரிக்கா

சூடானில் தூதரகத்தை மூடும் பிரான்ஸ்!

  • April 24, 2023
  • 0 Comments

சூடானில் உள்ள தூதரகத்தை பிரான்ஸ் மூடியுள்ளது. சூடானில் நிலவும் மோதல் காரணமாக தூதரகம் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தூதரக நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, சுவிட்சர்லாந்தும் தனது தூதரகத்தை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
  • 0 Comments

சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை. வெளியுறவுத்துறை மந்திரி ஆண்ட்ரூ மிட்செல்லிடமிருந்து மோதல் குறித்து அறி்க்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை

யாழில் பாடசாலை மாணவியுடன் ஆபாசமாக பேசிய ஆசிரியர் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

  • April 24, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியான சிறுமியுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புறநகர் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரே, யாழ்ப்பாண பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார். இன்று காலை 6 மணியளவில் ஆசிரியர் தொலைபேசியில் ஆபாசமாக பேசியதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.பெற்றோரின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்திய ஆசிரியர், மாணவிக்கு தொலைபேசியில் கணிதம் கற்பிக்கப் போவதாகவும் அவரிடம் தொலைபேசியை கொடுக்குமாறும் குறிப்பிட்டதாக பெற்றோரின் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். மாணவியிடம் தொலைபேசியை கொடுத்த பின்னர் […]

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
  • 0 Comments

ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம் ஆண்டிலும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன. அஸர்பைஜானிலுள்ள, ஆர்மேனியர்களைக் கொண்ட நாகோர்னோ – கராபாக் பிராந்தியம் தொடர்பாக இந்த யுத்தங்கள் ஏற்பட்டன. இந்நிலையில்இ நாகோர்னோ – கராபாக் பிராந்தியம்தையும் ஆர்மேனியாவையும் இணைக்கும் லாசின் – கன்கேன்டி வீதியில் தனது முதல் சோதனைசாவடியை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்தாபித்ததாக அஸர்பைஜானின் எல்லைச் சேவைப் படை […]

இலங்கை

சீனாவை எதிர்கொள்ள நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் அவுஸ்ரேலியா!

  • April 24, 2023
  • 0 Comments

சீனாவை எதிர்கொள்வதற்காக அவுஸ்திரேலியா நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளது. அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு நிலை குறித்து  மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. ஏவுகணை யுகத்தில் அவுஸ்திரேலியா புவியியல் ரீதியிலான தனிமைப்படுத்தல் மூலம் தன்னை பாதுகாக்க முடியாது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 110 அறிக்கையை இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பாரிய மாற்றம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாம் உலகபோருக்கு பின்னர் எந்த நாட்டிலும் காணப்படாத அளவிற்கு சீனாவின் […]

ஐரோப்பா

சுவிஸில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு: வெளியான முக்கிய தகவல்!

  • April 24, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கொரோனா தொடர்பில் முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. சுவிஸ் நகரங்களில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சில பகுதிகளில் மறைவான கொரோனா அலை ஒன்று பரவிவருவதாக தெரிவித்துள்ளன. கழிவுநீரில் காணப்படும் கொரோனா வைரஸின் அளவு, 2022 கோடை மற்றும் கடந்த இலையுதிர்காலத்தில் காணப்பட்டதைவிட அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும், Aargau மகாணம்தான் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் தற்போது கொரோனா […]

அறிந்திருக்க வேண்டியவை

உலகின் மொத்த அணுவாயுதங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு

  • April 24, 2023
  • 0 Comments

உலகின் மொத்த அணுவாயுதங்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கணிசமான அளவு அணுவாயுதங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ரஷ்யாவும் சீனாவும் அந்த எண்ணிக்கை உயர்வதற்குப் பெரிய பங்காற்றியதாக Nuclear Weapons Ban Monitor எனும் அமைப்பு வெளியிட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது. உக்ரேனியப் போரால் அணுவாயுதப் பதற்றம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. உலகின் 9 இடங்களில் 9,575 அணுவாயுதக் கட்டமைப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. அவை பாய்ச்சுவதற்குத் தயார்நிலையில் இருப்பதாகவும் ஆய்வு குறிப்பிட்டது. அவற்றின் மொத்த சக்தி – […]