இந்தியா செய்தி

ஆந்திராவில் 2 ரயில்கள் மோதியதில் 6 பேர் பலி

ஆந்திரா மாநிலம் கந்தகபள்ளி பகுதியில் உள்ள ரெயில் தடத்தில் விசாகா- ராயகாடா பயணிகள் ரெயில் பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதே தண்டவாளத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரெயில் அதன் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இதில், பயணிகள் ரெயிலின் 3 பெண்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

தற்போது மேலும் 3 பேர் பலியாகியுள்ளதாகவும், இதனால் உயரிழப்பு எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து ரெயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.

மேலும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ரெயிலில் பயணிகள் இருந்ததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content