ஐரோப்பா செய்தி

வானத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள்; சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல்!

நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப் போவதாக முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரான ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் திங்களன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏவுகணை வீசி தாக்கவுள்ளதாக அச்சுறுத்தினார்.அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து அவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு புடின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியது. இருப்பினும், உக்ரைனில் எந்த அட்டூழியமும் செய்யவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.

 

 

மெட்வெடேவ் புடினின் தீவிர ஆதரவாளராக நன்கு அறியப்பட்டவர். டெலிகிராமில் அவர் அனுப்பிய செய்தியில், “எனக்கு பயமாக இருக்கிறது, ஜென்டில்மென், எல்லோரும் கடவுளுக்கும் ஏவுகணைகளுக்கும் பதிலளிக்க வேண்டியிருக்கும். வட கடலில் ரஷ்ய போர்க்கப்பலிலிருந்து சுடப்படும் ஹைப்பர்சோனிக் ஓனிக்ஸ் ஏவுகணை ஹேக் நீதிமன்ற கட்டிடத்தை எவ்வாறு தாக்குகிறது என்பதை கற்பனை செய்வது மிகவும் சாத்தியம். அதை சுட்டு வீழ்த்த முடியாது, நான் பயப்படுகிறேன் என்று அவர் கூறினார்.

முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மெட்வெடேவ் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளை வானத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று எச்சரித்தது மட்டுமல்லாமல். சர்வதேச நீதிமன்றத்தை ஒரு பரிதாபத்திற்குரிய சர்வதேச அமைப்பு என்று அவர் கூறினார்.

குழந்தைகளை சட்டவிரோதமாக நாடுகடத்தியது மற்றும் உக்ரைன் பிரதேசத்திலிருந்து ரஷ்ய கூட்டமைப்புக்கு சட்டவிரோதமாக மக்களை மாற்றியது போன்ற சந்தேகத்தின் பேரில் புடினை கைது செய்ய ICC வாரண்ட் பிறப்பித்தது.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content