ஐரோப்பா செய்தி

லிபியாவில் இருந்து புறப்பட்டு நடுக்கடலில் கவிழ்ந்த படகு… 30 புலம்பெயர்ந்தோருக்கு நேர்ந்த துயரம் !

47 புலம்பெயர்வாளர்களுடன் பயணித்த படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததால், அந்தப் படகில் பயணித்த 30 பேர் பரிதாபமாக பலியாகிய துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

லிபியாவிலிருந்து 47 புலம்பெயர்வோருடன் புறப்பட்ட படகு ஒன்று மத்தியதரைக்கடலில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது.Benghazi என்ற இடத்துக்கு 110 மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோசமான வானிலை காரணமாக அந்தப் படகு கவிழ்ந்துள்ளது.

Alarm Phone என்னும் தொண்டு நிறுவனத்துக்கு இந்த தகவல் கிடைக்கவே, அவர்கள் இந்த தகவலை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்கள்.உடனே, அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த FROLAND என்னும் அந்தக் கப்பல் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. என்றாலும், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 17 பேரைத்தான் அவர்களால் உயிருடன் மீட்க முடிந்துள்ளது. 30 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகிவிட்டார்கள்.

இந்த செய்தியை Alarm Phone தொண்டு நிறுவனம் நேற்று இரவு 9.00 மணியளவில் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content