செய்தி தமிழ்நாடு

மூன்று நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவி

சிவகங்கை அரண்மனை வாசல் முன்புள்ள சண்முகராஜா கலையரங்கில் நகர் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கழக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி மற்றும் மாவட்ட செயலாளரும் கூட்டுறவு துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இத அதிமுகவில் நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் சின்னம்மா என காலை பிடித்துக்கொண்டு பதவி ஏற்றவர் பின்னர் அவர்களை தூக்கி எரிந்து துரோகம் விளைவித்தவர் பழனிச்சாமி என பேசியதுடன் பிரதமர் மோடிக்கு நேற்று முதலே கேடு காலம் ஆரம்பமாகிவிட்டது,

என்றும் ராகுல் காந்தியை பதவிநீக்கம் செய்தது முதலே அவருக்கான கவுண்டவுன் துவங்கிவிட்டது என்றும் உடனடியாக ராகுலின் பதவியை பறித்த சபாநாயகர் ஏன் கடந்த 4 ஆண்டுகளாக துனை சபாநாயகர் தேர்தலை ஏன் நடத்தவில்லை,

என்று கேள்வி எழுப்பிய அவர் இன்னும் மூன்று நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்று தருவோம் என பேசினார். இந்த கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் உடனிருந்தனர்.

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content