இந்தியா செய்தி

புதுடில்லியில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண உதவிய சுவிட்சர்லாந்து

இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் நிலவும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண சுவிஸ் ஆய்வாளர்கள் உதவியுள்ளார்கள்.

புதுடில்லியில், இரவு நேரங்களில் smog எனப்படும் புகைப்பனி அதிக அளவில் காணப்படுகிறது.அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய சுவிட்சர்லாந்தின் Paul Scherrer Institute (PSI) என்ற நிறுவனத்தின் ஆய்வாளர்களும், இந்தியாவின் Indian Institute of Technology Kanpur ஆய்வாளர்களும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவுகள், புதுடில்லியில் காணப்படும் இந்த புகைப்பனிக்கான காரணத்தை விளக்கியுள்ளன.

அதாவது, சமைப்பதற்காகவும், குளிரிலிருந்து காத்துக்கொள்வதற்காகவும் மக்கள் விறகுகளைப் பயன்படுத்துவதே இந்த புகைப்பனிக்குக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புகையிலுள்ள சில வாயு மூலக்கூறுகள் சில மணி நேரத்திற்குள் இறுகிக் கடினமாகி துகள்களாக மாறுகின்றன, அவை இணைந்து சாம்பல் நிற ஆவியை உருவாக்குகின்றன என அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content