பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்ட FIFA தீர்மானம்
உலகக் கோப்பைப் போட்டிகளில் தனியார் பங்குகளை விற்பனை செய்வதற்கான தனது முன்மொழியப்பட்ட திட்டத்தைக் கைவிட ஃபிஃபா முடிவு செய்துள்ளதாக தலைவர் கியானி இன்ஃபான்டினோ அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் கால்பந்து சங்கங்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை மற்றும் பிற முக்கியப் போட்டிகளை நடத்துவதற்காக 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு புதிய துணை நிறுவனத்தை அமைக்கப்போவதாகவும், தனது பங்குகளில் 20 சதவீதத்தை வெளி முதலீட்டாளர்களுக்கு விற்கப்போவதாகவும் ஃபிஃபா சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் வெளி முதலீட்டாளர்களை உள்ளடக்கிய ஒரு புதிய தனியார் பங்குத் திட்டத்தை ஃபிஃபா செயல்படுத்தினால், வரவிருக்கும் உலகக் கோப்பையைப் புறக்கணிக்கப்போவதாக UEFA எச்சரித்துள்ளது.
UEFA உலகக் கால்பந்தில் மிகவும் சக்திவாய்ந்த சங்கமாகும்.
அதன்படி, தனியார் முதலீட்டுத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, 55 UEFA உறுப்பு சங்கங்கள் உலகக் கோப்பை மற்றும் ஃபிஃபாவின் மற்ற அனைத்துப் போட்டிகளையும் புறக்கணிக்க ஒருமனதாக முடிவு செய்திருந்தன.





