ஆசியா

தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை தோல்வி!

தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த குற்றப் பிரேரணை இன்று (07) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அதிபர் திடீரென ராணுவச் சட்டத்தை விதித்த சம்பவத்தின் அடிப்படையில் தென்கொரிய அதிபர் யுன் சுக் யோலுக்கு எதிராக தென்கொரிய எதிர்க்கட்சிகள் பதவி நீக்கம் கொண்டு வந்துள்ளன.

உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் பதவி நீக்க வாக்கெடுப்பு நடைபெற்றது.

குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அது பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும், அதன்படி, 200 எம்.பி.க்கள் பிரேரணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சியில் 192 எம்.பி.க்கள் உள்ளனர், பதவி நீக்கத்தில் வெற்றி பெற அவர்கள் எட்டு ஆளும் கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது.

எனினும், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினர்.

அந்த எம்.பி.க்களில் ஒரு சிலர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு திரும்பினர், வாக்கெடுப்பின் போது அக்கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர்.

அதன்படி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்