ஈரானின் தொடர் தாக்குதலால் கத்தாரில் மூவர் படுகாயம்
கத்தாரில் ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களால் சிறிய குழந்தை உள்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
140 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் இன்று தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலைத் தாங்கள் இடைமறித்ததாகவும், அதனால் சிதறல்கள் விழுந்ததாகவும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அந்த சிதறல்களின் காரணமாக மூவர் படுகாயம் அடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநேரம் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட ஏனைய வளைக்குடா நாடுகளும் ஈரானின் திடீர் தாக்குதல்களை உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




