இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலையில் பாரிய மாற்றம்

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைவடையவுள்ளதாக அறிவிக்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்

இன்று இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

92 ஒக்டேன் பெற்றோல் 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும் ஒட்டோ டீசல் விலை 80 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் விலை 325 ரூபாவாக குறைவடையவுள்ளது.

அவ்வாறே சுப்பர் டீசல் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 465 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.

மண்ணெண்ணெய் விலையும் 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 295 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content