ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி விசா மற்றும் கடவுச்சீட்டை பயன்படுத்தி செல்ல முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வருகை தரும் முனையத்தில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் பிரஜைகள் இலங்கைக்குள் பிரவேசிக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கருமப்பீடத்தில் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களின கடவுச்சீட்டில் இருந்த விசா முத்திரைகள் கழற்றி அகற்றப்பட்டிந்ததை காணக்கூடியதாக இருந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர்களின் கடவுச்சீட்டுகள் விமான நிலைய எல்லை கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பரிசோதிக்கப்பட்டுள்ளது.

அங்கு கடவுச்சீட்டுகளில் போலி ஆஸ்திரேலிய விசா முத்திரைகள் ஒட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், பங்களாதேஷின் டாக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content