செய்தி வட அமெரிக்கா

அமெரிக்கா இலங்கைக்கு மூன்று தொன் ஊட்டச்சத்து மருந்துகளை அனுப்பியுள்ளது

அமெரிக்காவின் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் அபிவிருத்தி அமைப்பு, இலங்கை முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மூன்று தொன்  ஊட்டச்சத்து மருந்துகளை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வோசிங்டன் டி.சியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க இந்த மனிதாபிமான உதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டரில்  பதிவிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், அமெரிக்காவின் இவ்வாறான அற்புதமான செயற்பாட்டை பாராட்டியுள்ளதுடன்,

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள  சவாலான நேரத்தில் அமெரிக்க மக்கள் எப்படி இலங்கைக்கு தமது ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் வழங்குகின்றார்கள் என்பதற்கு மற்றொரு சிறந்த உதாரணம் இதுவாகும் எனவும் கூறியுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content