செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய காலநிலை – 2 நாள்களில் 60 புயல் தாக்குதல்

அமெரிக்காவில் 2 நாட்களில் மட்டும் 60 புயல்கள் உருவானதாக தெரிவிகப்பட்டுள்ளது.

இந்த புயலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடும் புயல் வீசியது. இதில் இல்லினாய்ஸ், டென்னிசி, மிசிசிப்பி, அயோவா, ஒக்லஹாமா, அர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன.

ஏராளமான வீடுகள், கட்டடங்கள் கடும் சேதம் அடைந்ததுடன், மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்து கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டு பல நகரங்களில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புயல் பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content